Sunday, October 27, 2013

கல்யாண மன்னன் ! - குட்டியூண்டு நாட்டை 'குட்டிகள்’ சூழ ஆட்சி செய்கிறார் மன்னர்

- Timepass..

சுவிட்சர்லாந்து தெரியும். சுவாசிலாந்து தெரியுமா? தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு. இந்தக் குட்டியூண்டு நாட்டை 'குட்டிகள்’ சூழ ஆட்சி செய்கிறார் மன்னர் மூன்றாம் ஸ்வாட்டி.
அந்த நாட்டுக் குல வழக்கப்படி பட்டத்துக்கு வந்துவிட்ட அரசர் எப்போது திருமணம் செய் கிறாரோ, அப்போதிருந்து ஆண்டுக்கு ஒரு திருமணம் செய்து தன் ராணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தக் கணக்கின்படி ஸ்வாட்டி, 30 வயதில் தன் முதல் திருமணம் செய்தார். சமீபத் தில் தன் 45-வது வயதில், 15-வது ராணியை மணந்திருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா?
தங்கள் மன்னர், புது ராணியைத் தேர்ந் தெடுக்க, வருடந்தோறும் நாட்டிலுள்ள இளம் பெண்களையெல்லாம் ஒரு மைதானத் தில் சங்கமிக்கவைத்து அரசே விழா நடத்துகிறது. அவர்களை ஆடவும், பாடவும் வைத்து, தனக்குப் பிடித்தமான ராணியை ரசித்து தேர்வு செய்கிறார் மன்னர்.
பண்டு இன ஆதிவாசி மக்கள் அதிகம் வாழும் நாடு. இந்த நாட்டு மக்களில் கல்வி கற்றோர் மிகவும் குறைவு. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இங்கு இருந்தாலும், மன்னரே நாட்டின் பலம் மிக்கவர். வருடம் ஒரு முறை நடக்கும் சுயம்வரம்தான் தேசத்தின் பெரிய திருவிழா.இதைக் காண்பதற்காக பல நாடுகளி லிருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெ டுத்து வருகிறார்கள். இதன் மூலம் அந்த நாட்டுக்கு நல்ல வருமானமும் வருகிறது.
விழா நடக்கும் மைதானத்தில் மன்னர் நடுநாயகமாக அமர்ந்திருப்பார். இளம்பெண் கள் நாணல் புற்களைக் கைகளில் ஏந்திக் கொண்டு மன்னரின் முன் ஆடுவார்கள். அதுவும் எப்படி? மேலாடை இல்லாமல். நாணல் புல்லை வைத்து ஆடும் இளம்பெண்கள் அதை மன்னரின் முதுகில் வருடி விடுவார்களாம். அதில் எது ரொம்ப இதமாக இருக்கிறதோ, அந்தப் பெண்ணுக்குத்தான் ஜாக்பாட் அடிக்கும்.  
தற்போது 'சின்டிஸ்வா டிலோமினி’ என்ற பெண்ணை அதிகாரப்பூர்வ ராணியாக தேர்ந்தெடுத்திருக்கும் மன்னருக்கு ஏற்கெனவே உள்ள ராணிகள் மூலம் 24 பிள்ளைகள் இருக்கிறதாம். இவர்கள் படிக்க தனிப் பள்ளிக்கூடமும் அரண்மனைக்குள் உண்டு. பாரம்பரியம் என்ற பேரில் செக்ஸ் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு சுவாசிலாந்து இளம்பெண்கள் வாழ்க்கையைக் காலி செய்யும் மன்னரின் செயலைக் கண்டித்து சர்வதேசங்களிலுள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், ''எங்கள் நாட்டு இறையாண்மைக்குள் தலையிடாதீர்கள்'' என்று பொசுக்கென்று கோபப்படுகிறார் மன்னர்.
என்னமோ போடா மாதவா!

No comments:

Post a Comment