த.சத்தியநாராயணன், சென்னை.
''விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடு கள் எப்படி இருக்கின்றன?''
''காலம்தான் உரைகல்லாக இருக்கும்!''
கருப்பம்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.
''உண்மையைச் சொல்லுங்கள். கோபாலபுரத்தில் சுதந்திரமாக உலவியது போல, போயஸ் தோட்டத்தில் உலவ முடிந்ததா?''
''தி.மு.க-வில் கடுமையாக உழைத்த வன் என்ற முறையில், நினைத்த நேரங்களில் கோபாலபுரத்துக்குச் சென்று இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்சியின் பொதுச் செயலா ளர் என்ற முறையில்தான் நான் போயஸ் தோட்டத்துக்குச் சென்று இருக்கிறேன். அப்போது, உரிய மரியாதையோடு நடத்தப்பட்டு இருக்கிறேன்!''
''இன்றைய இளம் நடிக, நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?''
''ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட விரும்பவில்லை!''
வி.சிஜேன் மாதவன், மயிலாடுதுறை.
''தங்களின் உடனடி இலக்கு... தமிழ் ஈழமா? சேது சமுத்திரத் திட்டமா? ஆட்சியைப் பிடிப்பதா?''
''அறமும் நெறியும் ஓங்கிய தொல் பழங்காலத் தமிழகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் இன்றைய சிதைவில்இருந்து மீட்டு எடுப்பது; தமிழகத்தின் வாழ்வாதாரங் களைக் காப்பது; ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பது; சாதி, மதப் பூசல் அற்ற மனிதநேயம் ஓங்கிட, மறுமலர்ச்சி பெறும் தமிழகம்; சுதந்திரத் தமிழ் ஈழ நாடு... இவையே என் இலக்குகள்!''
ஆ.பிரபு, சென்னை.
''எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்?''
''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்றுஎதை யும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும்!''
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
''திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுவது, உங்கள் பலவீனம் என்கிறார்களே?''
''வேறு எதுவும் சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம் இது.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்’
என்று வான்மறையில் வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பிறரது துன்பத்தை, துயரைக் காண்கையில், எண்ணுகையில், என் கண்களில் நீர். ஆபத்துகளுக்கோ, மரணமே வந்திடுமோ என்ற அச்சத்துக்கோ, கலங்கியதும் இல்லை, கண்கள் கசிந்ததும் இல்லை!''
ஆ.பிரபு, சென்னை.
''அரசியலுக்கு வந்தது தவறு என்று எப்போதாவது வருத்தப்பட்டதுஉண்டா?''
1993 அக்டோபர் 3-ல், கொலைப் பழி சுமத்தப்பட்டபோது வருந்தினேன்!''
கே.ஆண்டனி, நாகப்பட்டினம்.
''கூட்டணியைவிட்டு உங்களை ஜெயலலிதா வெளியேற்ற, உண்மையான காரணம் என்ன?''
''1998-ல் அண்ணா தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ (நீங்கள்தான் எனக்குப் போட்டியாளர்) என்று சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து, 'நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். நானோ, அரும்பி மலர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். என்னை ஏன் போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ என்றேன். 'உங்களுக்குத் தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ என்றார். அத்தோடு நான் அதை மறந்துவிட்டேன்.
2006 முதல் ஐந்து ஆண்டுகள், மிக உறுதியாக, நல்ல தோழமை வளர்ந்திட நான் செயல்பட்டும், ஆறு இடங்கள் என்று தொடங்கி, எட்டு இடங்கள் வரை சொல்லி அனுப்பியவர், அதற்கு மறுநாளே, திரு.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட் டையன் ஆகியோரை என் இல்லத்துக்கு அனுப்பிவைத்து, அந்த எட்டு இடங்களும் தர முடியாது; அதைவிடக் குறைவாகத்தான் தர முடியும் என்று தெரிவித்தபோது, என்னைப் புண்படுத்தி, அ.தி.மு.க-வுக்கு எதிராக அறிக்கைவிட வைப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு வார காலம் அமைதி காத்தேன்.
கூட்டணியைவிட்டு என்னை வெளியேற்று வதற்கு, உலகக் கோடீசுவரர்களுள் ஒருவர் நடத்துகின்ற தொழில் நிறுவனம் காரணம் என்று சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. தவறு செய்தால், தவறுகளையும், அநீதி களையும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் எதிர்த்துப் போராடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்து இருக்கலாம்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்களுக்குப் பிடித்த பேச்சாளர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்?''
''அண்ணாவின் பேச்சு, கல்கியின் எழுத்து; விஸ்வநாதன் - இராமமூர்த்தி, இளையராஜாவின் இசை; சுசீலா, ஜிக்கி, ஜானகி, டி.எம்.எஸ்., சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்; பத்மினியின் நாட்டியம்!''
வி.மருதவாணன், தஞ்சாவூர்.
''நாடாளுமன்றத்தில் முதன்முதலாக கன்னிப் பேச்சு பேசும்போது உங்களுக்கு நடுக்கம் இருந்ததா?''
''சட்ட மன்ற அனுபவம் ஏதும் இன்றி, நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு நிகழ்த்தியபோது, மனதில் ஒரு பரபரப்பும், எவ்விதத்திலாவது முத்திரைப் பதித்துவிட வேண்டுமே என்ற துடிப்பும் உள்ளத்தில் இருந்தது.
1978 ஏப்ரல் 26-ம் தேதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாகப் பாதித்து, வட மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டு இருந்த, குழந்தைகளின் உயிர் குடித்த மூளைக் காய்ச்சல் (என்செபாலிடீஸ்) நோய்க் கொடுமையைத் தடுக்க, மத்திய அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல், அந்நோய் நாடு முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது என்று பேசினேன். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முன்னிறுத்தி, ஆங்கில இலக்கியத்தில் வீரச் சிறுவன் கசாபியங்கா வெளிப்படுத்திய துணிச்சலையும், மரணத்தை எதிர்கொண்ட அவனுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஏற்றுக்கொண்ட கொள் கைக்காக, அவனைப் போல போராடுவேன் என்று பேசினேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் மனதாரப் பாராட்டியதும், இந்த உரையைத் தயாரிப்பதற்கு ஊக்கம் அளித்தவர் முரசொலி மாறன் என்பதும் மறக்க முடியாதவை!''
த.சத்தியநாராயணன், சென்னை.
நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் என்று கேள்விப்பட்டேன். அவர் நடித்த படங்களில், தங்களால் மறக்க முடியாத படம் எது?''
''பாசமலர்!''
க.ராமலிங்கம், பாபநாசம்.
''உங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தகுதியே, உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?''
''அளவுக்கு அதிகமான தகுதி எனக்கு இல்லை. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் முதல் இடம் பெற்றேன். பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றேன். கைப்பந்து, கூடைப்பந்து, கல்லூரி அணிகளில் இடம் பெற்றேன்.
தி.மு.கழகத்தில் உழைப்பதில், தொண்டு செய்வதில், மேடைக் கலையில் முத்திரை பதிப்பதில், சிறைச்சாலைக்கு முதல் ஆளாகச் செல்வதில், தொண்டர்களை நேசித்து அரவணைப்பதில், கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் வெற்றிபுரிக்குக் கொண்டுசெல்லத் துடிப்பதில் என் சக்திக்கு மீறி அர்ப்பணிப்புடன் இருந்தது என் இயல்பு.
1975 சேலம் தி.மு.க. மாநாடு; 78 திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாடு; 85 கடலூர் தி.மு.க. மாநாடு; இவற்றில் நான் ஆற்றிய உரைகள், மிகுந்த பாராட்டையும் தொண்டர்களிடம் எனக்கு ஈடற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
1987 வரை, எனது நாடாளுமன்றப் பணிகள் பாராட்டப் பட்டன. அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்டதற்காக, 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். எனினும், கட்சியின் நலன் மதிப்பைக் கருதி, அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினேன். நீதிமன்றத்திலும் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன் என்று தனியாக, பிரமாண வாக்குமூலம் கொடுத்தேன்.
1990 பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், பிற்பகல் 2 மணி அளவில் நான் உரை ஆற்றியதும், 1993 மார்ச் மாதத்தில், கோவை தி.மு.க. மாநில மாநாட்டில், 'மத வெறியும் மக்கள் சீரழிவும்’ என்ற தலைப்பில் நண்பகல் உணவு வேளையில் உரை ஆற்றி யதும் மிகச் சிறந்தவை என்று, தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் மெச்சினர். அதுவே, அரசியல் வாழ்வில் என்னைத் தாக்கிய இடிகளுக்கும் காரணமாக அமைந்தன.
1998 ஜனவரியில், திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. மாநாட்டில், நண்பகலில் நான் ஆற்றிய உரை, எவரும் எதிர் பாராத வரவேற்பைத் தொண்டர்களிடம் ஏற்படுத்தியபோது, அதை அக்கட்சியின் தலைமை ரசிக்கவே இல்லை என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.
எதிலும் சராசரியாக இருந்திருந்தால், பிரச்னைகளே வராமல்கூடப் போயிருக்கலாம். தடைகள்தாம், சாதனைக்கான படிக்கட்டுகள். மலையளவு பலம்கொண்ட சக்திகளோடு மோதும்போதுதான், போராடும் உரமும் மனதுக்கு நிறைவும் கிடைக்கின்றது!''
த.சத்தியநாராயணன், சென்னை.
''விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடு கள் எப்படி இருக்கின்றன?''
''காலம்தான் உரைகல்லாக இருக்கும்!''
கருப்பம்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.
''உண்மையைச் சொல்லுங்கள். கோபாலபுரத்தில் சுதந்திரமாக உலவியது போல, போயஸ் தோட்டத்தில் உலவ முடிந்ததா?''
''தி.மு.க-வில் கடுமையாக உழைத்த வன் என்ற முறையில், நினைத்த நேரங்களில் கோபாலபுரத்துக்குச் சென்று இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்சியின் பொதுச் செயலா ளர் என்ற முறையில்தான் நான் போயஸ் தோட்டத்துக்குச் சென்று இருக்கிறேன். அப்போது, உரிய மரியாதையோடு நடத்தப்பட்டு இருக்கிறேன்!''
''இன்றைய இளம் நடிக, நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?''
''ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட விரும்பவில்லை!''
வி.சிஜேன் மாதவன், மயிலாடுதுறை.
''தங்களின் உடனடி இலக்கு... தமிழ் ஈழமா? சேது சமுத்திரத் திட்டமா? ஆட்சியைப் பிடிப்பதா?''
''அறமும் நெறியும் ஓங்கிய தொல் பழங்காலத் தமிழகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் இன்றைய சிதைவில்இருந்து மீட்டு எடுப்பது; தமிழகத்தின் வாழ்வாதாரங் களைக் காப்பது; ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பது; சாதி, மதப் பூசல் அற்ற மனிதநேயம் ஓங்கிட, மறுமலர்ச்சி பெறும் தமிழகம்; சுதந்திரத் தமிழ் ஈழ நாடு... இவையே என் இலக்குகள்!''
ஆ.பிரபு, சென்னை.
''எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்?''
''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்றுஎதை யும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும்!''
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
''திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுவது, உங்கள் பலவீனம் என்கிறார்களே?''
''வேறு எதுவும் சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம் இது.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்’
என்று வான்மறையில் வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பிறரது துன்பத்தை, துயரைக் காண்கையில், எண்ணுகையில், என் கண்களில் நீர். ஆபத்துகளுக்கோ, மரணமே வந்திடுமோ என்ற அச்சத்துக்கோ, கலங்கியதும் இல்லை, கண்கள் கசிந்ததும் இல்லை!''
ஆ.பிரபு, சென்னை.
''அரசியலுக்கு வந்தது தவறு என்று எப்போதாவது வருத்தப்பட்டதுஉண்டா?''
1993 அக்டோபர் 3-ல், கொலைப் பழி சுமத்தப்பட்டபோது வருந்தினேன்!''
கே.ஆண்டனி, நாகப்பட்டினம்.
''கூட்டணியைவிட்டு உங்களை ஜெயலலிதா வெளியேற்ற, உண்மையான காரணம் என்ன?''
''1998-ல் அண்ணா தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ (நீங்கள்தான் எனக்குப் போட்டியாளர்) என்று சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து, 'நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். நானோ, அரும்பி மலர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். என்னை ஏன் போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ என்றேன். 'உங்களுக்குத் தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ என்றார். அத்தோடு நான் அதை மறந்துவிட்டேன்.
2006 முதல் ஐந்து ஆண்டுகள், மிக உறுதியாக, நல்ல தோழமை வளர்ந்திட நான் செயல்பட்டும், ஆறு இடங்கள் என்று தொடங்கி, எட்டு இடங்கள் வரை சொல்லி அனுப்பியவர், அதற்கு மறுநாளே, திரு.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட் டையன் ஆகியோரை என் இல்லத்துக்கு அனுப்பிவைத்து, அந்த எட்டு இடங்களும் தர முடியாது; அதைவிடக் குறைவாகத்தான் தர முடியும் என்று தெரிவித்தபோது, என்னைப் புண்படுத்தி, அ.தி.மு.க-வுக்கு எதிராக அறிக்கைவிட வைப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு வார காலம் அமைதி காத்தேன்.
கூட்டணியைவிட்டு என்னை வெளியேற்று வதற்கு, உலகக் கோடீசுவரர்களுள் ஒருவர் நடத்துகின்ற தொழில் நிறுவனம் காரணம் என்று சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. தவறு செய்தால், தவறுகளையும், அநீதி களையும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் எதிர்த்துப் போராடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்து இருக்கலாம்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்களுக்குப் பிடித்த பேச்சாளர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்?''
''அண்ணாவின் பேச்சு, கல்கியின் எழுத்து; விஸ்வநாதன் - இராமமூர்த்தி, இளையராஜாவின் இசை; சுசீலா, ஜிக்கி, ஜானகி, டி.எம்.எஸ்., சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்; பத்மினியின் நாட்டியம்!''
வி.மருதவாணன், தஞ்சாவூர்.
''நாடாளுமன்றத்தில் முதன்முதலாக கன்னிப் பேச்சு பேசும்போது உங்களுக்கு நடுக்கம் இருந்ததா?''
''சட்ட மன்ற அனுபவம் ஏதும் இன்றி, நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு நிகழ்த்தியபோது, மனதில் ஒரு பரபரப்பும், எவ்விதத்திலாவது முத்திரைப் பதித்துவிட வேண்டுமே என்ற துடிப்பும் உள்ளத்தில் இருந்தது.
1978 ஏப்ரல் 26-ம் தேதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாகப் பாதித்து, வட மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டு இருந்த, குழந்தைகளின் உயிர் குடித்த மூளைக் காய்ச்சல் (என்செபாலிடீஸ்) நோய்க் கொடுமையைத் தடுக்க, மத்திய அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல், அந்நோய் நாடு முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது என்று பேசினேன். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முன்னிறுத்தி, ஆங்கில இலக்கியத்தில் வீரச் சிறுவன் கசாபியங்கா வெளிப்படுத்திய துணிச்சலையும், மரணத்தை எதிர்கொண்ட அவனுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஏற்றுக்கொண்ட கொள் கைக்காக, அவனைப் போல போராடுவேன் என்று பேசினேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் மனதாரப் பாராட்டியதும், இந்த உரையைத் தயாரிப்பதற்கு ஊக்கம் அளித்தவர் முரசொலி மாறன் என்பதும் மறக்க முடியாதவை!''
த.சத்தியநாராயணன், சென்னை.
நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் என்று கேள்விப்பட்டேன். அவர் நடித்த படங்களில், தங்களால் மறக்க முடியாத படம் எது?''
''பாசமலர்!''
க.ராமலிங்கம், பாபநாசம்.
''உங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தகுதியே, உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?''
''அளவுக்கு அதிகமான தகுதி எனக்கு இல்லை. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் முதல் இடம் பெற்றேன். பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றேன். கைப்பந்து, கூடைப்பந்து, கல்லூரி அணிகளில் இடம் பெற்றேன்.
தி.மு.கழகத்தில் உழைப்பதில், தொண்டு செய்வதில், மேடைக் கலையில் முத்திரை பதிப்பதில், சிறைச்சாலைக்கு முதல் ஆளாகச் செல்வதில், தொண்டர்களை நேசித்து அரவணைப்பதில், கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் வெற்றிபுரிக்குக் கொண்டுசெல்லத் துடிப்பதில் என் சக்திக்கு மீறி அர்ப்பணிப்புடன் இருந்தது என் இயல்பு.
1975 சேலம் தி.மு.க. மாநாடு; 78 திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாடு; 85 கடலூர் தி.மு.க. மாநாடு; இவற்றில் நான் ஆற்றிய உரைகள், மிகுந்த பாராட்டையும் தொண்டர்களிடம் எனக்கு ஈடற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
1987 வரை, எனது நாடாளுமன்றப் பணிகள் பாராட்டப் பட்டன. அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்டதற்காக, 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். எனினும், கட்சியின் நலன் மதிப்பைக் கருதி, அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினேன். நீதிமன்றத்திலும் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன் என்று தனியாக, பிரமாண வாக்குமூலம் கொடுத்தேன்.
1990 பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், பிற்பகல் 2 மணி அளவில் நான் உரை ஆற்றியதும், 1993 மார்ச் மாதத்தில், கோவை தி.மு.க. மாநில மாநாட்டில், 'மத வெறியும் மக்கள் சீரழிவும்’ என்ற தலைப்பில் நண்பகல் உணவு வேளையில் உரை ஆற்றி யதும் மிகச் சிறந்தவை என்று, தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் மெச்சினர். அதுவே, அரசியல் வாழ்வில் என்னைத் தாக்கிய இடிகளுக்கும் காரணமாக அமைந்தன.
1998 ஜனவரியில், திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. மாநாட்டில், நண்பகலில் நான் ஆற்றிய உரை, எவரும் எதிர் பாராத வரவேற்பைத் தொண்டர்களிடம் ஏற்படுத்தியபோது, அதை அக்கட்சியின் தலைமை ரசிக்கவே இல்லை என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.
எதிலும் சராசரியாக இருந்திருந்தால், பிரச்னைகளே வராமல்கூடப் போயிருக்கலாம். தடைகள்தாம், சாதனைக்கான படிக்கட்டுகள். மலையளவு பலம்கொண்ட சக்திகளோடு மோதும்போதுதான், போராடும் உரமும் மனதுக்கு நிறைவும் கிடைக்கின்றது!''