Saturday, November 30, 2013

ரியாக்‌ஷன் !



போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் -Time pass





 


அரசுத் திட்டங்கள் + மானியங்கள்!

அரசுத் திட்டங்கள் + மானியங்கள்!

ஆறாம் திணை - 64

துவரை வீட்டிலும் நடுத்தர, கையேந்தி பவன் வகை உணவகங்களிலும் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதல்முறையாக நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?
எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது! நான் வேலைபார்த்த மருத்துவமனையின் அதிபர், எங்களையெல்லாம் நட்சத்திர உணவக விருந்துக்கு அழைத்துச் சென்றார். மேஜை முன் சாப்பிட அமர்ந்ததும், மடியில் துண்டை விரித்தார்கள். உணவு மேஜையில் தட்டுக்கு அருகில் கத்தி ஸ்பூன், முள் கரண்டி... என, பளபள ஆயுதங்களைப் பார்த்ததுமே பதட்டமாகியது. அகோரப் பசியுடன் நாங்கள் காத்திருக்க, 15 நிமிடங்களில் சாப்பிடவேண்டிய உணவு வகைகளை ஆற அமர இரண்டு மணி நேரத்துக்குப் பரிமாறினார்கள். கரண்டியில் எடுக்கவேண்டியதை ஃபோர்க்கிலும், கையில் கிள்ளவேண்டியதை கத்தியிலும், ஃபோர்க்கில் குத்தவேண்டியதை கரண்டியிலுமாக தட்டுத்தடுமாறி எடுத்துச் சாப்பிட்டு முடித்தபோது, கடினமான கணக்குப் பரீட்சை எழுதி வந்த களைப்பு உண்டானது எனக்கு.
புது இடத்தில் சாப்பிடும்போது, உணவு மேஜையில் வயிற்றுக்கு வெளியே நடக்கும் பரபரப்பு இது. இதே ரீதியிலான பதற்றம்தான் புது வகை உணவை உண்ணும்போது வயிற்றுக்குள்ளும் அரங்கேறும்... அமிலங்களின் கொதிகொதிப்போடு!
அதிலும் புதுப்புது வெளிநாட்டுச் சந்தை உணவுகளைச் சாப்பிடும்போது நம் வயிற்றுக்குள் உள்ள பெப்சின் (உணவை ஜீரணிக்க உதவும் நொதி) பயத்துடனே பழக்கமில்லாதவற்றைச் சுவைக்கும் என்கிறது உணவு மரபணு அறிவியல். போதாக்குறைக்கு வயிற்றுக்குள்ளும், சிறுகுடலின் உள்ளும் உள்ள சமர்த்தான சில நுண்ணுயிரிகள், 'இது ஏதோ புதுசா இருக்கு. நான் அப்புறமா சாப்பிடுறேன்’ என பயத்தில் ஒதுங்குவதும் நடக்குமாம். எப்போதேனும் இப்படியான பதற்றம் அரங்கேறினால், உடம்பு நோகாது. அடிக்கடி நடக்கும்போது மருத்துவரை நாட வேண்டியிருக்கும்!
மேற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக் கொண்ட 'மேயோனைஸ்’ சாஸ் (Mayonnaise), இப்போது சிந்துபூந்துறைச் சித்தப்பா வீட்டு உணவு மேஜை வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. காய்ச்சல் கண்டபோது மட்டுமே பார்த்திருந்த ரொட்டியை, நீளவாக்கில் பிளந்து அதில் மேயோனைஸைத் தடவி சிலபல காய்கறிகளை நுழைத்து, கூடுதல் சீஸையும் பிதுக்கி, வாய் வலிக்கப் பிளந்து சாப்பிடும் கலாசாரம் இங்கே வேகமாகப் பரவுகிறது.
'பாலும் கீரையும் ஒன்றாகச் சேரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் சேரக் கூடாது. தயிருடன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி நஞ்சாகும்’ என சித்த மருத்துவம் சொல்லும் தமிழர் உணவு விதிகளை, குழந்தைகள் உலகத்தில் விதைக்காமலேயே கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
எண்ணெய், பால், முட்டை, வினிகர், பதப் பொருள்கள், சுவையூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலவையாக எமல்சிஃபை செய்யப்பட்ட பொருளே 'மேயோனைஸ்’. அதிகளவிலான டிரான்ஸ் ஃபேட்டும், ரத்த நாளங்களில் படியும் கெட்டக் கொழுப்பையும் தரும் அந்த சாஸ், நம் சீதோஷ்ண நிலைக்கும் ஜீரண சுழற்சிக்கும் எப்போதும் பழக்கமானது அல்ல. அதோடு, என்றோ எப்போதோ எங்கேயோ செத்த பிராய்லர் கோழி இறைச்சி, பெருங்கடல் மீன் இறைச்சி அல்லது உருளை மசியல்களை, அந்தப் பால் எண்ணெய் பொருளில் தோய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்தோஷப்படுத்தினாலும்(?), நெடுங்காலத்தில் நிச்சயம் சங்கடப்படுத்தும். இந்த மேயோனைஸ், கட்டக் கடைசியாக சாப்பாட்டின் மேல் ஒரு கோட்டிங் தடவி ருசி சேர்க்க உதவும் ஒரு பொருள். ஆனால், நம்
பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் சமைத்த பின் கடைசியாகச் சேர்த்த விஷயமே வேறு. அப்படி நம் முன்னோர்கள் சேர்த்தது மணம் மட்டுமல்ல, மருத்துவத்தையும்தான்.
சாம்பாரோ, வத்தக்குழம்போ, வாழைக்காய் பொரியலோ அதில் போடும் பெருங்காயத் தூளே அந்த மருத்துவம். பெருங்காயம், ஒரு தாவர ரெசின். அதன் கந்தக மணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதனை, 'பிசாசு மலம்’ (Devil dung) என்று முகம் சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளூ’ நோயில் கொத்துக்கொத்தாக இறந்தபோது, பெருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத் துண்டுகளைக் கட்டித் திரிந்தார்கள் அதே அமெரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதனை 'கடவுளின் உணவு’ (Food of Gods) என பெயர் மாற்றியது வரலாறு. பறவைக் காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் Symadineக்கு இணையான, வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காய்ச்சலை மட்டுமல்ல, கேன்சரையும் தடுக்கும் தன்மைகொண்டது பெருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு சாக்லேட், மாதுளை ரசம் இவற்றில் எல்லாம் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட் பெருங்காயத்தில் நிறையவே உள்ளது.
ருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அளவுக்கு நம்மில் பலர் கருஞ்சீரகத்தைக் கண்டுகொள்வது இல்லை. இஸ்லாத்தின் தந்தை முகமது அவர்கள், மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும் என்று அன்றே குறிப்பிட்டது கருஞ்சீரகத்தைதான். அதன் எண்ணெய், கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதையும், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதையும், கொஞ்சம் குணப்படுத்த கடினமான குடலின் Ulcerative colitis  நோயைக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலுள்ள THYMOQUINONE, வேறு எந்த தாவரத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறது Healing Spices நூல்.
யாருடைய துரத்தலுக்கோ எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில் தொலைத்தவை, ஜன்னல் காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து மாக்கோலம், மாடக்குழி விளக்கு, தோட்டத்து கிரேந்திப்பூ, கிணற்றுக் குளியல், திருவிழாக் களிப்பு மட்டுமல்ல... நம் நலவாழ்வையும்தான். கொஞ்சம் திரும்பிப் பார்த்து, வயோதிகச் சுருக்கங்களில் இன்னும் ஒட்டியிருக்கும் மிச்சத்தையாவது, எடுத்து ஒட்டிக்கொள்வோமே!
- பரிமாறுவேன்...
-Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 3

ராபர்ட் கிளைவ் இறந்து விட் டார். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடி யுமா?  
 ''ராபர்ட் கிளைவ் குவித்த செல் வத்துக்கு அளவே இல்லை. வங் காளத்தில் இருந்த பொக்கிஷத்தை எல்லாம் தன்வசப்படுத்தினார். இந்திய மன்னர்கள் குவியல் குவியலாகச் சேகரித்து வைத்திருந்த நாணயம், நகைகள், ரத்தினங்கள் அனைத்தும் கிளைவுக்கு சொந்தம் ஆக்கப்பட்டது. கிளைவ், பொன்குவியல்களுக்கும் வெள்ளிக் குவியல்களுக்கும் இடையே உல்லாசமாக இருந்தார். வைரங்கள், நவரத்தினங்களுக்கு மத்தியில் கிளைவ் மூழ்கிக் கிடந்தார்'' என்று சுதேசித் தலைவர்கள் சொல்லவில்லை. தன்னுடைய குறிப்புகளில் இப்படி எழுதியிருப்பது மெக் காலே. இன்று நாம் எந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ... எந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகிறோமோ... அதற்கு அடித்தளம் அமைத்த மெக்காலேதான் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்!
ராபர்ட் கிளைவ் இறந்து போனார் என்றால் ராபர்ட் வதேரா யார்? கேத்தன் தேசாய் யார்? அமர் சிங் யார்?
இந்தியாவிலேயே உயர்ந்த ரியல் எஸ்டேட் அதிபராக ராபர்ட் வதேரா உயர்ந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பித்தளை வியாபாரம் பார்க்க ஆரம்பித்த ராபர்ட் வதேரா, இந்தியாவின் உயர்ந்த குடும்பத்தின் மகளான பிரியங்காவை அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர். ஒரே ஒரு இடத்தை விற்று 42 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவை வந்த பாதைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். அவரது சொத்தும் முதலீடும், 20 ஆண்டுகளாக பெருந்தொழிலில் இருப்பவர்களால்கூட அடைய முடியாதது. ஊடகங்களுக்கு முன்னால் தலைதொங்கி ராபர்ட் வதேரா நின்றுகொண்டு இருக்கிறார். சோனி யாவிடம் ராகுல் சொன்னதாக டெல்லியில் ஒரு ஜோக் உண்டு.
''முதலில் 2ஜி, அப்புறம் நிலக்கரிஜி, இப்போது ஜிஜாஜி'' என்றாராம் ராகுல். (ஜியாஜி என்றால் மச்சான்!)
2008-ம் ஆண்டு இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா வாக்கு கோரப்பட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றி வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்த அமர் சிங், ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு வந்த எம்.பி-க்கள் சிலர், தங்களுக்குத் தரப்பட்ட ஒரு கோடி ரூபாயைக் கொண்டுவந்து காட்டினர். கரன்சியால் மிதந்தது நாடாளுமன்றம். ஒரே ஒரு தடவைதான் இப்படி பணத்தைக் கொண்டுவந்து காட்டினர் என்பதால், ஒரே ஒரு தடவைதான் இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அந்தப் பெரிய மனிதர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை!
இப்படித்தான் சுதந்திரத்துக்கு முந்தைய இந் தியாவிலும் பணம் பொங்கியது!
''கடல் பொங்குவதுபோல் இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் பொங்கி வந்தது''- என்று எழுதினார் மெக்காலே. அந்த அளவுக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் போனது. கிரீஸ் தேசத்து அலெக்சாண்டர், இந்தியாவுக்குள் நுழைந்ததும் எப்படி நடந்துகொண்டாரோ... கஜினி, வட இந்தியாவின் கானோஜ் சமஸ்தானத்தில் எதைச் செய்தாரோ... அதைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தது. இப்படி, வந்தவர்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் வசதி கொண் டதாகத்தான் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பிரிட்டிஷார் ஏன் வந்தனர்? வியாபாரம் செய்வதற்கு! இந்தியா ஏழை நாடாக இருந்திருந்தால், யாராவது வியாபாரம் செய்வதற்கு வந்திருப்பார்களா? வளமுள்ள இடத்தில்தானே வியாபாரம் நடக்கும்? எனவே, பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியா வள மாகத்தான் இருந்தது.
''வங்கதேசம் சொத்து உள்ள நாடாக இருந்தது. வழிப்போக்கர்களில் யாராவது சொத்தை வழியில் இழந்து விட்டால், அந்த சொத்தைக் கண்டெடுத்தவர்கள் பக்கத்து மரங்களில் அதைக் கட்டி வைத்து விடுவார்கள். அதன்பிறகு அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்'' என ஹால்வெல் என்ற வெளிநாட்டுப் பயணி எழுதி இருக்கிறார். இதே வங்கநாடு, பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்த பிறகு, பெரிய மாறுதலை அடைந்தது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் ஒவ்வொரு கப்பலிலும் வங்கநாட்டு நிதிக்குவியல் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலைமை 1850-களில் அப்படியே மாறி விட்டது. இதை, டாக்டர் மார்ஷமன் எழுதினார். ''வங்கநாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது. நாய் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த சிறு குடிசைகளில், கந்தல் துணியுடனும் ஒருவேளை உணவு இல்லாமலும் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 40 லட்சம் ரூபாய் வருமானத்தை மட்டும் திரட்டுபவர்களின் காதுகளில், மக்களின் பரிதாபக் கூக்குரல் விழாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
நான்கு விதங்களில் பணத்தை கிழக்கிந்திய கம்பெனி திரட்டி, இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றது. அன்றைக்கு இருந்த மன்னர்களிடம் இனாமாகவும் காணிக்கையாகவும் பெற்ற பணம், மக்களிடம் வசூல் செய்தது, கம்பெனி ஆட்கள் செய்த வர்த்தகத்தின் மூலமாக திரட்டிய பணம், சுதேச சமஸ்தானங்களிடம் இருந்து தட்டிப்பறித்த பணம்... என்று பொன்னும் பொருளும் பணமும் திரட்டப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வியாபாரம் அனைத்தும் கம்பெனியின் நன்மைக்காக நடந்தது. கம்பெனி அதிகாரிகள் இந்திய தறி நெசவாளர்களைக் கொடுமைப்படுத்தினர். ஒரு விலையைச் சொல்லி, அந்த விலைக்குத்தான் பொருட்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொழிலாளர்களையும் நெசவாளர்களையும் கம்பெனிக்காக மட்டுமே தவிர, மற்றவர்களுக்கு வேலை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். இதை எழுதி வாங்கினர். எழுதித்தர மறுத்தவர்களை, மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இந்தக் கொடுமைக்குப் பயந்த பல நெசவாளிகள் தங்களது கையின் கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். 'விரல் இருந்தால்தானே நெசவு நெய்துதரச் சொல்வாய்?’ என்று நினைத்து கட்டை விரலை வெட்டிக்கொண்டார்களாம். சில இடங்களில் தங்களது பேச்சைக் கேட்காத தொழிலாளர்கள் மற்றும் நெசவாளிகளின் கட்டை விரலை பிரிட்டிஷாரே வெட்டியுள்ளனர்.
1765 முதல் 1771 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நான்கு கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் கம் பெனிக்கு வந்த மொத்தப் பணம் 13 கோடி என்றால், மூன்றில் ஒரு பங்கு பணம் இங்கிலாந்துக்குச் சென்றது. படை நடத்த, போர் புரிய, சம்பளம் கொடுக்க, சாப்பிட, உள்கட்டமைப்பு வசதி போக மிஞ்சியது அனைத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டுபோனார்கள்.
கம்பெனி வர்த்தகம் செய்தது போக, கம்பெனியின் அதிகாரிகள் தனியாக வர்த்தகம் பார்த்தனர். உப்பு, வெற்றிலை பாக்கு, புகையிலை வியாபாரம் பார்த்தார் கிளைவ். அவர் இதைச் செய்யக் கூடாது என்று கம்பெனியின் வர்த்தகர்களும், கீழே இருந்த அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், அவர் கேட்கவில்லை.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது, அதில் ஜான்ஸவிவன் என்ற நிர்வாகி (1804 முதல் 1841 வரை இந்திய நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்தவர்) சாட்சியம் அளித்தார். ''தர்மத்தின்படியும் பொருளாதார நிலை மையின்படியும் என்னைக் கேட்டால், அவர்களது பழைய சுதேச மன்னர்களிடமே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிடுவதே சரியானது என்று கூறுவேன். அவர்களிடம் இருந்து நாம் பணம் பெறுவதை அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து பெறும் பணத்தை அவர்களது நாட்டில் செலவழிக்காததையே அவர்கள் குறை சொல்கிறார்கள். இந்தியா சுரண்டப்படுவதாக நினைக்கிறார்கள். எல்லா நல்ல பொருள்களையும் - பஞ்சு, பன்னீரை இழுத்துக்கொள்வதைப் போல - நம் ஆளுகைக்கு இழுத்துக்கொண்டு, கங்கையில் உள்ளதை தேம்ஸ் நதிக்கரையில் கொண்டுபோய் கொட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்று அவர் சாட்சியத்தில் சொன்னார்.
அப்போது தேம்ஸில் மட்டுமே கொட்டினார்கள். இன்று எல்லா நாடுகளிலும் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேதம் காட்டுவது இல்லை!
இந்த வருத்தங்கள் மெள்ள எழுந்தபோது, 'உங்களுக்கு என்ன சலுகை எல்லாம் செய்து தருகிறோம்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்டியல் போட ஆரம்பித்தனர். ''தற்கால நாகரிகத்தை ஒட்டிய தொழில்களையும், தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான ஒரு அரசாங்கத்தை அடைந்த பாக்கியம் ஒன்றே உங்களுக்குப் போதுமே'' என்று, லண்டனில் இருந்த இந்திய ஆலோசனை சபை உறுப்பினர் ஸர்ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார்.
இதைப் படிக்கும்போது ஆ.ராசா சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும். ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, சாமான்யர்கள் அனைவர் கையிலும் செல்போன் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன் அல்லவா... அது ஒன்றுதான் நான் செய்த தவறு'' என்றார் ஆ.ராசா. பிரிட்டிஷார் எல்லாம் செய்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்று பேசினர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், மக்கள் நலன் என்கிறார்கள்.
அன்றைக்கு ராபர்ட் கிளைவ் கொள்ளையடித்துச் சென்ற பணத்துக்கு அவரை மட்டுமே குற்றம்சாட்டி தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் கோர்ட். இன்றும் அதுதானே நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஆ.ராசா மட்டுமே குற்றவாளி என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிக்கை சொல்கிறது. ''இல்லை! இந்தியாவின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் எந்த விதிமுறையையும் நான் மாற்றவில்லை. அனைவருக்கும் எனது நடவ டிக்கைகளைச் சொல்லியே வந்தேன்'' என்கிறார் ஆ.ராசா. இன்னும் ஒருபடி மேலே போன கருணாநிதி, ''தனிப்பட்ட ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?'' என்று கேட்டார். ராசாவை மட்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பிரதமரையும் நிதி அமைச் சரையும் ராசா குற்றம் சாட்டுகிறார். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்ன?
கற்பரசி கண்ணகியா, சீதையா என்று பட்டிமன்றம் நடந்ததாம். கண்ணகியை கற்பரசி என்று பேசியவர்கள், சீதையைக் கொச்சைப்படுத்தினர். சீதையைக் கற்பரசி என்று பேசியவர்கள், கண்ணகியைக் கொச்சைப்படுத்தினர். விவாதத்தைக் கேட்டவர்கள், கண்ணகியையும் சீதையையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்களாம். அப்படித்தான் நடந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரமும்!
''அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நமது சமுதாயம் முழுவதும் பெருநோயாக பரவிவருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல் என்ற நோய்க்கு ஏழைகள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் அதன் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கிறது'' என்று 83-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சொன்னார். அதையே அவரது அத்தை இந்திராவும் சொன்னார். அதையே நேருவும் சொன்னார். ஆனால், என்றும் மாறாததாக ஊழல் இருந்தது. இருக்கிறது. இருக்கும்!
''கள்ளச் சந்தைக்காரர்களும் கறுப்புப் பணக்காரர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அருகில் உள்ள மின் கம்பங்களில் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அடிமை இந்தியாவில் நேரு சொன்னார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடிந்ததா?
சுரண்டலை உணர்வோம்!

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 2


அடுத்த வீட்டுக்குள் புகுந்து அப கரிப்பவர்​களுக்குப் பெயர் கொள் ளையன், திருடன் என்றால்... சொந்த வீட்டுக் குள்ளேயே திருடுபவர்களுக்கு என்ன பெயர்? அரசியல்​வாதிகளா?!
ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார், முறைகேட்டில் ஈடுபட்டார்... என்பதெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய வைக்கும் கீழான செயல்களின் பட்டியலில் இல்லை. மாறாக, அது ஒரு கௌரவமாக மாறிவிட்டது. 'அஞ்சு வருஷம் இருந்தாரு... நல்லா சம்பாதிச்சாரு’ என்று மக்களே நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கப் பழகிவிட்டனர். 'அஞ்சு வருஷம் பதவியில இருந்தாரு... நல்லா திருடுனாரு’ என்று எவரையும் சொல் வதில்லை. காரணம், எப்படியாவது பணம் வந்தால், அது தகுதி வந்ததாக வரவு வைக்கப்படுகிறது. அதனால்தான், இன்று ஊழல்கள் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கப்படுகின்றன.
நிலக்கரி முறைகேடு வெளிச்​சத்துக்கு வந்தபோது, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே சொன்னதுதான், இந்திய மனச் சாட்சியின் குரல்.
''நிலக்கரி... நிலக்கரி... என்று பேசு​கிறார்கள். சில நாட்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். இப்படித்தான் ஒரு காலத்தில் போஃபர்ஸ்... போஃபர்ஸ்... என்று பேசினர். அதன் பிறகு மறந்துவிட்டனர் அல்லவா? அப் படித்தான் நிலக்கரியையும் மறந்து போவார்கள்! யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' - என்று ஷிண்டே சிரித்துக்கொண்டே சொல்ல... முன்வரிசையில் இருந்தவர்கள் சிலிர்த்தபடி கைதட்டினர். உற்சாகமான ஷிண்டே, தன் முன்னால் இருந்த மேஜையைப் பெருமிதமாகத் தட்டிக்கொண்டார். அந்தக் காட்சியை டி.வி-யில் பார்த்தவர்களுக்குத் தெரியும், எத்தகைய மலை முழுங்கி மகாதேவன்கள் மத்தியில் நாம் வாழ்ந்து​கொண்டிருக்​கிறோம் என்று.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலை​குனிவை இன்றுவரை ஏற்படுத்திவரும் விவகாரம். காங்கிரஸ் கட்சி 1984-க்கு முன்பும் பின்பும் 450 இடங்களை இந்திய நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது இல் லை. அப்படிப்பட்ட செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை, 1989 தேர்தலில் அதல பாதாளத்துக்குத் தள்ளியது போஃபர்ஸ். நேரு, இந்திரா, ராஜீவ் என்று 40 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிமுகமான குடும்பத்தை... நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இன்னார் என்று தெரியாத வி.பி.சிங், அருண் நேரு... போன்றவர்கள் வீழ்த்தக் காரணமானது போஃபர்ஸ். அதைத்தான் மக்கள் மறந்துவிட்டனர் என்றார் ஷிண்டே. மக்கள் மறந்துவிட்டதாக ஷிண்டேக்கள் நினைக்கிறார்கள். இப்படிச் சொல்வதன் மூலமாக போஃபர்ஸ் பீரங்கிகளை எளிதாக மறைக்க முடியும் என்று நம்புவதுதான் அரசியல் துரதிருஷ்டம்.
நிலக்கரிக்கு முன்னதாகக் கிளம்பியது ஸ்பெக்ட்ரம். இந்த முறைகேட்டால் லாபம் அடைந்த நிறுவனங்கள் பெற்ற உரிமத்தை  உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. அப்போது அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த வாக்கு மூலம் மொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்தது.
''இப்படியெல்லாம் லைசென்ஸை கேன்சல் செய்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். இதனால் இந்தியாவுக்குத்தான் நஷ்டம்'' என்று குதித்தார் குர்ஷித்.
இந்திய அரசின் கஜானாவுக்கு வரவேண்டிய பணத்தை தனியார் சிலர் கொழிப்பதற்காக விதிமுறைகளை மீறி வேறுபக்கமாகத் திருப்பி விட்டனர் என்பதுதான் ஸ்பெக்ட்ரம் வழக் கின் மையமான குற்றச்சாட்டு. சிலரின் சுயநலச் சுரண்டலால் இந்திய அரசு நஷ்டம் அடைந்தது சல்மான் குர்ஷித்தின் கண்ணுக்குத் தெரியவில்லை. 'கொள்ளை லாபம் அடைய முடியாமல் வாசலை அடைத்தால் இந்தியாவுக்கு முதலீடு வராது. அதனால் இந்தியாவுக்கு இழப்பு’ என்று ஊழலுக்கு பச்சையாக உரம் போட்டு வளர்க்கிறார்கள். 'நீ வா... இந்தியாவுக்குள் வா... எந்த விதிமுறைமீறலும் செய்துகொள்’ என்று அழைப்பதற்குப் பெயர் வர்த்தகமா? கூட்டுக் கொள்ளையா?
''சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வாருங்கள்'' என்று நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தபோது அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கோபம் பீறிட்டது. ''மீட்டுக்கொண்டு வாருங்கள்... மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால், பணத்தை மீட்டுவர ராணுவத்தையா அனுப்ப முடியும்?'' என்று கேட்டார். யார் யார் பணம் போட்டு வைத்துள்ளனர் என்ற பட்டியலையாவது கொடுங்கள் என்றபோது, இன்னொரு பல்டி அடித்தார்.
''கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளி நாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களை வாங் கினோம்.'' -இது பிரணாப் அளித்த பதில். யாருக்கும் சொல்லாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, அந்தத் தகவலை எதற்காக வாங்க வேண்டும்? அதாவது, அரசியல் நெருக்கடி காரணமாக தகவ லைப் பெற்று, அதை அப்படியே ஊறவைப்பது ஊழலுக்கு உரமாகத்தான் அமையுமே தவிர, உலை வைக்காது.
''எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போவதோ?'' என்று பாரதி பாடியது, அந்நிய வியாதிகளைப் பார்த்து. ஆனால், அது சுதேசி  அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமாய் இருக்கிறது.  
'இதுதான் சுரண்டல் கொள்கை’ என்ற வரையறையை இந்திய மண்ணில் முதலில் பேசியவர் தாதாபாய் நௌரோஜி. இந்தியாவின் வளம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இங்கிலாந்தின் சுரண்டல் தத்துவம் என்று வரையறுத்தார். 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சியும்’ என்ற அவரது புத்தகம் 1901-ம் ஆண்டு வெளியானது. 'இந்தியா தொடர்ந்து வறுமையான நாடாக மாறுவதற்குக் காரணம் இந்தச் சுரண்டல்தான்’ என்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தை பொருளாதாரப் பார்வை கொண்டு பார்த்தவர் இவர். பிரிட்டிஷ் ஆதிக் கத்தை பொருளாதார நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்று காந்தியைத் தூண்டியது இந்தப் புத்தகம். ''நான் இந்தியாவின் ஏழ்மையின் ஆழ, அகலங்களை தாதாபாயின் புத்தகத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன்'' என்று காந்தி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தச் சொத்துச் சுரண்டல்தான் இந்தியாவில் வறுமைத் தன்மையை அதிகப்படுத்தியது என்று தாதாபாயும் காந்தியும் சொன்னது  உண்மையானால், இன் றைய வறுமைக்கும் ஏழ்மைக்கும், இன்றைய ஊழலும் கறுப்புப் பணமும்தானே காரணமாக இருக்க முடியும்?
சுதந்திரம் மலர்ந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும், புதிய பொருளாதாரக் கொள்கை பூத்து 23 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தியாவின் வறுமையும் ஏழ்மையும் குறையவில்லை. அதிகமாகத்தான் ஆகி இருக்கிறது.
கிராமத்தில் 27 ரூபாய் 20 பைசாவுக்கு மேலும், நகரத்தில் 33 ரூபாய் 40 பைசாவுக்கு மேலும் ஒரு நாளைக்கு செலவுசெய்யக் கூடியவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என்று வரையறுத்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 2012-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 26 கோடியே 90 லட்சம் பேர். இந்த செலவுக் கணக்குக்கு முன்னதாக 2004-ம் ஆண்டு எடுக் கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் ஏழை களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் பேர். ஒரு நாளைக்கு கிராமத்தில் 28 ரூபாயையும், நகரத்தில் 34 ரூபாயையும் வைத்து எதையுமே செய்ய முடியாது என்பது, இந்த வரையறையைச் செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால், 'ஃபுல் மீல்ஸ் சாப் பிடலாம்’ என்று எகத்தாளம் காட்டியவர் ரசூல் மஷீத். மருத் துவ இடத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இப்போது சிறையில் களி தின்றுகொண்டு இருக்கிறார். இந்த ரூபாயை வைத்து ஒரு நாளை ஓட்ட முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி. 'இன்னமும் 28 ரூபாய், 34 ரூபாய் தரத்துடன் இந்திய வாக்காளன் இருக்கிறானே... அவனிடம் வாக்குக் கேட்டுப் போகிறோமே...’ என்ற வெட்கம் அதிகார வர்க்கத்துக்கு இருக்கிறதா? இந்த வறுமைக்குக் காரணம், ஊழலும் கறுப்புப் பணமும்தான். கடந்த 17 ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 விவசாயிகள் இறந்துபோயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் லட்சம் கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று வெளிநாடுகளில் பதுக்கும் தகவலும் நமது நாட்டில்தான் என்றால், இதை எப்படி புரிந்துகொள்வது.
இரண்டே வாக்கியத்தில் கார்ல் மார்க்ஸ் சொன்னார்: ''ஒரு முனையில் செல்வம் குவிகிறது. இதன் விளைவாக இன்னொரு முனையில் வறுமைத் துயர் குவிகிறது.''
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கட்டாந்தரையான விவசாய நிலங்கள், தற் கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், தொழில் உற்பத்தியின் வீழ்ச்சி... இவ்வளவுக்கும் மத்தியில் ஊழல் செய்வதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? பதுக்குவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?
இந்தியா வாங்கியுள்ள கடன் 2007-ம் வருட கணக்கின்படி 62.3 பில்லியன் டாலராக இருந் தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது 376.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், குறுகியகாலக் கடன் 159.6 பில்லியன் டாலர். 2014 மார்ச் மாதத்துக்குள் 172 பில்லியன் டாலரை நாம் செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. தலையை கடன் அமுக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் கறுப்புப் பணம் குவிந்துகொண்டு இருக்கிறது. இந்த சொத்துச் சுரண்டலை புரிந்துகொள்ளாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
எந்த அமெரிக்காவாக நாம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ... அந்த அமெரிக்காவே பல லட்சம் கோடி கடனில்தான் இருக்கிறது. ''கடன்தான் மிகவும் மோசமான வறுமை'' என்று தாமஸ் ஃபுல்லர் சொன்னார். ''இளையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள்தான் தேசியக் கடனை ஏற்றுக்கொள்ளப் போகிறவர்கள்'' என்று அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர் சொன்னார். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட இளைஞர்கள் தலையில் ஏராளமான கடனை ஏற்றிவைத்துவிட ஊழலும் முறைகேடும்தான் காரணம்.
இந்தியாவின் மிக முக்கியமான பொரு ளாதார மேதைகளில் ஒருவரான ஜி.வி.ஜோஷி எழுதினார்... ''நாம் வரலாற்றைச் சரியாகப் படித்தால், செல்வத்தை நோக்கித்தான் அதி காரம் ஈர்க்கப்படும்.''
ஆம்! இந்தியா விடுதலை அடைந்தது முதலே பணத்தை நோக்கித்தான் அதிகாரம் ஈர்க்கப்பட்டது!
 - சுரண்டலை உணர்வோம்
-Thanks Vikatan!

ஆ...சாமியோவ் ! - 3



'பத்து ரூபாய் வெச்சா... இருபது! இருபது ரூபாய் வெச்சா... நாற்பது!’ என்று பொருட்காட்சிகளில் சூதாட்டம் நடத்துகிறவர்களைப்போல வடக்கேயும் இந்த ரீதியில் ஏமாற்றிப் பிழைக்கும் திடீர் சாமியார்கள் அவ்வப்போது தோன்றுவார்கள். 'கஷ்டப்பட்டு படித்து வேலைக்குப் போய் சம்பாதித்து, குடும்ப செலவுகள் போக கொஞ்சம் பணத்தைச் சேர்த்துவைத்து - பணக்காரன் ஆகலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். ஆனால், அதுவே சாமியாராக மாறிவிட்டால் சம்பாதிப்பது சுலபம். சர்ர்ரென்று பணக்காரனாகிவிடலாம்!’ என்ற எண்ணம் வடக்கே ஒரு பெரிய கூட்டத்துக்கே வந்திருக்கிறது என்பதற்கு டெல்லி, உ.பி, ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் வெளியாகும் நாளிதழ்களில் தினமும் வருகின்ற செய்திகளே சாட்சி. 
'சரி, சாமியாரானால் பணக்காரனாகிவிடலாம்’ என்று யார் இவர்களுக்கு சொன்னது? இந்தக் கேள்விக்கு விடை தேடியபோது, பல சாமியார்கள் நம் கண் முன்னே தோன்றினார்கள். அதில் ஒரே ஒரு சாமியாரைப் பற்றி, இல்லை... இரட்டை சாமியார்களைப் பற்றி மட்டும் இப்போது பார்க்கலாம்.
சிலரைப் பார்ப்பதே பரம பாக்கியம் என்று நினைப்போம் இல்லையா..? அதுபோன்று தேஜஸ். இந்த இரட்டைத் துறவிகளுக்கும். இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தத் துறவிகளில் குரு - சிஷ்யன் என்ற பேதம் இல்லை. இரண்டு பேருமே குருதான். பெரும்பாலான நேரம் மௌனமாகவே இருக்கும் இந்த இரட்டைத் துறவிகள் யாகம் வளர்த்தால்... இவர்களிடம் இருந்து வேத மந்திரங்கள் பிரவாகமெடுக்கும். அந்தப் புனிதமான மந்திர ஓசைகளின் அர்த்தம் புரியாவிட்டாலும், அது எதிரில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் மீது பட்டு தெறிப்பதே அவர்களுக்கு ஜென்ம சாபல்யத்தை அளிப்பதுபோல உணர்வைக் கொடுக்கும்.
தும்பைப்பூ போன்ற தூய்மையான உடையில் இருக்கும் இந்தத் துறவி​களுக்குச் சொந்தமாக ஆசிரமங்கள் எதுவும் இல்லை. கால்போனப் போக்கில் நடப்பார்கள். வானம் இருட்டிவிட்டால் எந்த ஊரில் அப்போது இருக்கிறார்களோ... அதே ஊரில் ஓய்வெடுப்பார்கள். தங்களுக்கு உணவளிக்கும் வீட்டினருக்கு பிரதியுபகாரமாக, அந்த இரவு நேரத்திலேயே அவர்களின் வீட்டுக்குச் சென்று யாகம் நடத்துவார்கள். அந்த யாகப் புகை வீடு முழுவதும் பரவும்போதே... வீட்டில் சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் ஒருசேரப் பரவுவதைப்போல இருக்குமாம்.
பக்திக்கடலில் வீடு மூழ்கி இருக்கும் அந்த நேரத்தில், இந்தத் துறவிகள் எதைக் கேட்டாலும் இவர்களின் காலடியில் வைக்க அந்த வீட்டார் மனரீதியாகத் தயாராகிவிடுவார்கள். ஆனால் துறவிகளோ ஒரே ஒரு குண்டுமணி தங்கத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அந்தக் குண்டுமணித் தங்கத்தை ஒரு சிறிய வஸ்திரத்தின் மீது வைத்துவிட்டு கண்மூடி தியானம் செய்தால்... வேத மந்திரங்கள் அவர்கள் மீது பட்டு அதிருவதைப்போலவே மூடியிருக்கும் வஸ்திரத்தின் உள்ளே இருக்கும் தங்கத்தின் மீதும் பட்டுத் தெறிக்கும்.
யாகம் முடிவடையும் நிலையில் சீனியர் துறவிகள் இருவரும் மூடப்பட்டிருக்கும் அந்த வஸ்திரத்தை வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களிடம் கொடுப்பார்கள். வஸ்திரத்தை திறந்துப்பார்க்கும் அந்தப் பெண்கள், 'சொர்ண பாக்கியம்’ என்பதன் பொருளை முதன்முதலாக உணர்வார்கள். ஆம்! அவர்கள் வைத்த ஒரு குண்டுமணி தங்கம் இரண்டு குண்டுமணித் தங்கமாக இரட்டிப்பாகி இருக்கும். பக்தர்கள் கண்மூடிக் கண்திறப்பதற்கு இடையே இருந்த 60 வினாடிகளில் அந்த இரட்டைத் துறவிகள் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.
இப்போது அந்த வீட்டாரை ஆசை ஆட்டிப்படைக்கும். கை, கழுத்து, காது ஆகியவற்றில் இருக்கும் நகைகளை மட்டுமல்ல... உள்ளே அலமாரியில் இருக்கும் எல்லா நகை நட்டுக்களையும் கொண்டுவந்து அந்த இரட்டைத் துறவிகளின் காலடியில் வைத்து இரட்டிப்பாக்கிக் கொடுக்கச் சொல்லி இரைஞ்சுவார்கள்.
மீண்டும் வேத மந்திரங்கள் ஒலிக்கும். புகைமண்டலத்தில் வீடு மூழ்கும். மந்திர ஒலியும், யாகப்புகையும் முடியும் நேரம்... கண்விழித்துப் பார்த்தால் துலாபாரத்தின் துல்லியத்தோடு இவர்கள் வஸ்திரத்தில் வைத்த நகைகளுக்கு ஈடாக இரு மடங்கு தங்க நகைகள் அங்கே இருக்கும்.
சாப்பிட்ட ஒரு பிடி அவலுக்கு பல படிகள் அளந்த பரந்தாமனைப்போல, கொடுத்த ஒரு கவள உணவுக்குச் சொர்ணத்தை சொரிந்த இந்த இரட்டைத் துறவிகளின் காலடியில் அந்தக் குடும்பம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும். அடுத்த நாள்... பொழுது புலரும்; இருள் விலகும்; மனசுக்குள் புல்லாங்குழல் ஓசையில் பூபாளம் கேட்கும். ஆனால், அள்ளித்தந்த துறவிகள் இருக்க மாட்டார்கள்.
அந்த நாளில் இருந்து, துறவிகள் படுத்திருந்த இடத்தை விளக்குமாறால் சுத்தம் செய்வதுகூட பாவம் என்று கருதி அந்த வீட்டுப் பெண்கள் அந்த இடத்தை மட்டும் தூய்மையான துணி கொண்டுதான் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துவார்கள். என்றாவது ஒருநாள் திடீர் செலவுக்காக அடகு வைக்க நகைகளை எடுத்துச் செல்லும்போதுதான் துறவிகள் கொடுத்தது செப்புக் கலந்த பொன் அல்ல; கலப்படம் இல்லாத பித்தளை என்பது தெரியும்.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு டெல்லியைச் சுற்றியிருக்கும் பல சிற்றூர்களிலும் இப்படி காவல் நிலையத்துக்கு குடும்பம் குடும்பமாக செல்லும் ஏமாந்தவர்கள் தொகை அதிகம். அந்தக் கில்லாடி சாமியார்களை போலீஸாரால் வெகுகாலம் பிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஹரியானா, உ.பி, டெல்லி என்று மூன்று மாநிலங்களிலும் இந்த இரட்டைத் துறவிகள் தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டே இருப்பதுதான்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கெட்டப், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ட்ரிக் என்று மீசை, தாடி, முடி அலங்காரம் என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டியதால்... எல்லா ஊர்களிலும் தில்லுமுல்லு செய்வது இதே இரட்டையர்கள்தான் என்பதை பலகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. என்னதான் கெட்டிக்காரன் புளுகாக இருந்தாலும், எட்டு நாளைக்குதான் என்பார்கள். ஆனால், பல வருடங்கள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இவர்களின் புளுகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபத்தேப்பூர் நகரில் அம்பலமானது.
யாருமே போடாத கெட்டப் போட வேண்டும் என்று சினிமா ஹீரோக்கள் மெனக்கெடுவது மாதிரி, அன்று மிகவும் மெனக்கெட்டு பாம்பு சாமியார் வேடம் போட்டிருந்த இரட்டை சாமியார்களிடம் பாரத் சிங் என்பவர் சிக்கினார். ஜடா முடியும் கழுத்தில் பாம்புமாக காட்சியளித்த இவர்கள் பாரத் சிங்கின் கண்களுக்கு, சாட்சாத் பரமசிவனாகவே தெரிந்திருக்கிறார்கள். தன்னுடைய வீட்டுக்கு இவர்களை அழைத்து போய் மரியாதை செய்த பாரத் சிங், தன்னுடைய தீராத வியாதிக்கு இவர்களிடம் தீர்வு கேட்டிருக்கிறார். வழக்கம்போல குண்டுமணித் தங்கத்தில் தங்களின் விளையாட்டைத் தொடங்கிய இந்த இரட்டையர்கள், அந்த வீட்டில் ஒரு குண்டுமணித் தங்கத்தைக்கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு நடையைக் கட்டிவிட்டார்கள். மற்றவர்களைப் போல அல்லாமல், தான் ஏமாந்ததை சீக்கிரமே தெரிந்துகொண்ட பாரத் சிங் உடனடியாக போலீஸுக்குப் போனதால்... இருவரையும் ஃபத்தேப்பூர் போலீஸார் கைதுசெய்துவிட்டனர்.
போலீஸ் விசாரணையின்போது இந்த இருவரும் உ.பி. மாநிலம் ஃபெரிடாபாத்தைச் சேர்ந்த சூரஜ், தாராநாத் என்கிற சகோதரர்கள் என்பது தெரியவந்தது. ஹிப்னாடிஸ கலையில் தேர்ந்த இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட எப்படி ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியதைக் கேட்டால்... 'சூது கவ்வும் பார்ட் 2’ எடுக்கலாம்.
- முகத்திரை விலகும்!

ஆ...சாமியோவ் ! - 2

'பாம்பா... பழுதா?’ என்று உடனடியாக முடிவுக்கு வரமுடி யாதபடி பல சாமியார்கள் சாமர்த்தியமாக ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தச் சாமியார், 'நான் பாம்பு’ என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டு ஊருக்குள் ஊர்ந்து வருகிறார்!
'நான் ஒரு பாம்பு’ என்று சொல்லாமல் சொல்வதைப் போல 'இச்சாதாரி நாக்’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு சாமியார், டெல் லியில் மந்திரிகள், காவல் துறை அதிகாரிகள் என்று சகல மட்டத்திலும் கோலோச்சினார்.
'இச்சாதாரி நாக்’ என்றால், மனித வடிவில் இருக்கும் நாகம் என்று பொருள். பார்க்கின்ற பக்தர்களுக்கு எல்லாம் நாமம் போடுகிற இவரது இயற்பெயர்... ராஜீவ் ரஞ்சன் திரிவேதி என்ற சிவமூர்த்தி திரிவேதி என்ற இச்சாதாரி பாபா என்ற சுவாமி பீம்மானந்ஜி மஹராஜ் என்ற இச்சாதாரி நாக். ஆனால், அவரைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் சொல்வது, 'செக்ஸ் பாபா’!  
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிர​தேசத்துக்கு இடையே இருக்கும் சரித்திரப் புகழ்வாய்ந்த சித்திரக்கோட்தான் ராஜீவ் ரஞ்சனின் சொந்த ஊர். பிறந்த ஊரில் பிழைக்க வழிதெரியாமல், 1988-ம் ஆண்டு டெல்லிக்கு ஓடிவந்த ரஞ்சனுக்கு, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசல் திறந்தது. அவனுக்கு கிடைத்த வேலை, ஹோட்டல் வாசலில் நிற்கும்  செக்யூரிட்டி வேலை. குறுக்கு வழியில் முன்னேறத் துடித்த ரஞ்சனுக்கு, செக்யூரிட்டி வேலை சரிப்பட்டு வருமா? அந்த வேலையை உதறிவிட்டு தன் 'கேரக்ட’ருக்கு ஏற்ற மாதிரி, மசாஜ் பார்லரில் ஒரு வேலையை தேடிக் கொண்டான். பல வகையிலும் அது ரஞ்சனுக்கு வசதியாக இருந்தது.
மசாஜ் பார்லருக்கு வரும் மைனர்களின் டேட்டா பேஸ் இவனிடம் மளமளவெனச் சேர ஆரம்பித்தது. இந்த மைனர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய பெண்கள் வேண்டுமே? எதைச் செய்தாலும் ஹை கிளாஸாக செய்ய வேண்டும் என்ற 'தாகம்’ கொண்டவன் ரஞ்சன். அதனால், தொழில்முறை பாலியல் தொழிலாளிகளை தனது கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்ளத் தயங்கினான். விமானப் பணிப்பெண்கள், சினிமாவில் நடிக்க விரும்பும் மாடல்கள், பகட்டாக வாழ ஆசைப்படும் கல்லூரி மாணவிகள்... ஆகியோரை ரஞ்சன் குறிவைத்தான். இனிக்க இனிக்கப் பேசுவது, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து அசத்துவது... என்று அவன் விரித்த வலையில், மேல்தட்டுப் பெண்கள் பலரும் விழுந்தனர்.
'கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடி படலாமா?’ ஒரேசமயத்தில் பல பெண்களும் ஆண்களும் இவனுடைய வட்டாரத்துக்குள் வந்து போனால்... அது அடுத்தவர்களின் கண் களை உறுத்தாதா? அதனால், அப்படிப்பட்டவர்களைத் திசைதிருப்ப இச்சாதாரி பாபாவாக மாறி, காவி உடுத்திக்கொண்டு, டெல்லியை ஒட்டியிருக்கும் கான்பூர் என்ற ஏரியாவில், ஒரு கோயிலை எழுப்பினார் ரஞ்சன். அவரே அந்தக் கோயிலின் பிரதான சாமியாராகவும் ஆனார். அன்னதானம், ஆன்மிகச் சொற்பொழிவு... என்று இடைவிடாது நடத்தி.. அந்தக் கோயிலை மிகக்குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தினார்.
வெளியே கோயிலாக இருந்தாலும், அதன் உள்ளே தியான அறையைத் தாண்டினால்... ஏசி செய்யப்பட்ட சொர்க்கம் போன்ற பல சுரங்கங்கள் அதில் விரிந்தன. அந்த மூன்று அடுக்கு சுரங்கம் பார்ட் டைம் அந்தப்புரமாகவும் திகழ்ந்தது. வெளியே இருக்கும் கோயில் ஊதுவத்தி மணத்தால் நிறைந்திருந்தாலும், உள்ளே இருந்த சுரங்கங்கள் மல்லிகைப் பூவின் வாசத்தால் நிறைந்திருந்தன. மாதச் சம்பளம் என்றால் 25 ஆயிரம் ரூபாய். கமிஷன் என்றால், 25 சதவிகிதம் - இதுதான் இச்சாதாரி பாபா தன்னிடம் பணிபுரிந்த ஹை கிளாஸ் பெண்களுக்கு நிர்ணயித்திருந்த ஊதிய விகிதம்.
கோயிலுக்குள் இருக்கும்போது சாமியார் போல தலையை விரித்துப் போட் டுக்கொண்டு காட்சியளிக்கும் இச்சாதாரி பாபா, அதே கோயிலில் இருக்கும் அந்தரங்கப் பகுதிக்கு வந்ததும் தலைமுடியை போனிடெய்ல் போல கட்டிக்கொண்டு ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து கொள்வார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இச்சாதாரி பாபாவின் சேவையை அனுபவிக்க விமானத்தில் பல செல்வந்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் தேவைப்பட்டனர். ஆசிரமம் என்றால் வெளிநாட்டுப் பெண்கள் இருப்பது சகஜம்தானே? காவி உடுத்திக்கொண்டு பன்னாட்டு பிரஜைகளைத் தனது கோயிலில் அவர் உலவவிட்டார். அமெரிக் காவின் லாஸ்வேகாஸ் தொடங்கி ரஷ்யாவின் மாஸ்கோ வரை பல நகரங்களில் இருந்தும் இப்படிப்பட்ட பெண்கள் இவரது ஆசிரமத்துக்கு 'தொழில்’ நிமித்தமாக வந்து போனார்கள்.
இவரது வட்டத்துக்குள் ஹை கிளாஸ் பெண்கள் இருந்ததால்... லோ கிளாஸ் அரசியல்வாதிகளும், போலீஸ் அதிகாரிகளும் தாங்களாவே வந்து சேர்ந்தனர். இவரின் ஆளு கையில் நூறுக்குக்கணக்கான ஏஜென்ட்கள் சேர்ந்தனர். டெல்லி யிலேயே ஐந்து இடங்களில் இவர் கிளைகளைத் தொடங்கினார். இதுதவிர புனே, லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத்... என்று நாட்டின் பல நகரங்களிலும் இவர் தன் சேவையை விரிவு படுத்தினார். தன்னை ஒரு பெரிய தானபிரபுவாகக் காட்டிக்கொள்ள 200 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டினார் இச்சாதாரி பாபா. தான் செய்யும் சட்டவிரோதமான தொழிலுக்கு கோயிலும் மருத்துவமனையும் மட்டுமே கேடயமாக இருக்க முடியாது என்று தெரியாதவரா இச்சாதாரி பாபா? தனது தொழிலுக்கு பாதுகாப்பாக மிகப் பெரிய தாதாக்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு, ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்துகொண்டார். தான் கட்டிய கோயிலில் ஏழுநாள் வேள்வியை, அவ்வப்போது வீதியை அடைத்து பந்தல்போட்டு விமரிசையாக நடத்துவார் இச்சாதாரி.
எல்லோர் வாழ்கையிலும் ஒரு எஸ்கலேட்டர் வருவதுபோல, இச்சாதாரி பாபாவின் வாழ்க் கையிலும் காமன்வெல்த் கேம்ஸ் எனும் வடிவில் ஒரு எஸ்கலேட்டர் வந்தது. காமன்வெல்த் கேம்ஸ் என்பதை இச்சாதாரி 'காமன்’ வெல்த் கேம்ஸாகவே பார்த்தார். ஒரே சமயத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லிக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் என்பதால்... இதுதான் தன்னுடைய தொழிலுக்கு பொன்னான நேரம் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.
தன் கோயிலுக்கு வரும் வசதிபடைத்த பெண்களையும் கல்லூரி மாணவிகளையும்... லேப்டாப், செல்போன் போன்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து மயக்கிவந்த இச்சாதாரி, காமன்வெல்த் டிமாண்டை முன்னிட்டு, தகுதியுள்ள பெண்களுக்கு கார்களைக்கூட பரிசாக கொடுத்து தன் தொழில் வளையத்துக்குள் கொண்டுவந்தார். ஆனால், தொழில்போட்டி குறுக்கே வந்தது. அதனால், காமன்வெல்த் போட்டிகள் நடப்பதற்கு வெகு முன்பாகவே... அதாவது, பிப்ரவரி மாதமே இவர் கைது செய்யப்பட்டார். அப்போது இவரிடம் இருந்து பணம், பொருள், அணிகலண்கள் உட்பட ஆறு டைரிகள் கைப்பற்றப்பட்டன. இந்த டைரிகளின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பெண்ணின் போன் நம்பர் மற்றும் அந்தப் பெண்ணின் கணக்கு வழக்குகளையும் எழுதி வைத்திருந்தார்.  இவர் நடத்திய கோயில் உண்மையிலேயே கொடியவர்களின் கூடாரமாக இருந்தது, அப்போதுதான் அக்கம் பக்கத்தில் இருந்த பலருக்கும் தெரியவந்தது.
ஆனால், அந்த நிலையிலும் இச்சாதாரியை பல பக்தர்கள் கெட்டவன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. 'எங்கள் குருஜி உத்தமர். அவரை விட்டுவிடுங்கள்!’ என்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷம் போட்டனர். பக்தர்கள் தன் மீது கொண்ட அந்த அதீத நம்பிக்கையை திகார் சிறைசாலைக்குச் சென்ற பிறகும்கூட இச்சாதாரி கைவிடவில்லை. சிறைச்சாலையில் தினமும் அவர் உபன்யாசம் செய்ய... அதையும் பக்தி சிரத்தையோடு பல கைதிகள் கேட்க... இச்சாதாரியின் பிசினஸ் முடிவே இல்லாமல் தொடர்கிறது.
இச்சாதாரிக்கு சிறைச்சாலையில் தனிஅறை கேட்டு நீதிமன்றத்தில் மனுப்போட்ட அவரது வழக்கறிஞர், ''என் கட்சிக்காரருக்கு நாடு முழுவதும் 2,500 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதால்... சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், குறைந்தபட்சம் அவருக்கு தனி அறை கொடுக்க வேண்டும்’ என்று மனுப்போட்ட போது... அவரை ஆதரித்த அரசியல்வாதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இச்சாதாரியின் விஸ்வரூபம் தெரிந்தது!

-முகத்திரை விலகும்!

Saturday, November 23, 2013

பொக்கிஷம் - அன்று







வெள்ளை வேனின் கறுப்புப் பக்கங்கள்!

போராளிகளையும் தமிழர்களையும் மட்டுமா... இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் எந்த நபரையும் அள்ளிச் செல்கிறது வெள்ளை வேன். அப்படிக் கடத்திச் செல்லப்பட்டவர்கள், கருகிய பிணமாகவோ, அழுகிய சடலமாகவோ காணக் கிடைப்பார்கள். அல்லது காணாமல் போனவராகவோ, காற்றில் கரைந்தவராகவோ மட்டுமே நினைவில் இருப்பார்கள். இப்படி நடந்த நடுக்கமூட்டும் கொடூரங்களைப் பதிவுசெய்துள்ளது லீனா மணிமேகலை இயக்கியுள்ள 'வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ என்ற ஆவணப்படம்!
மகனைப் பறிகொடுத்த ஒரு தாய், கணவரை இழந்து தவிக்கும் ஒரு முஸ்லிம் மனைவி, முன்னாள் போராளியான ஒரு பெண் புலி, தந்தையைப் பறிகொடுத்த ஒரு மீனவச் சிறுமி என, ஏழு பேரின் சாட்சியங்களைப் பதிவுசெய்திருக்கும் ஆணவப்படம், பல சமயங்களில் மனதைக் கனக்கச் செய்கிறது. குத்தி வெளியில் எடுக்கப்பட்ட குடல், ரத்தம் சிதறி உருக்குலைந்த பிணம், மார்புகள் அறுக்கப் பட்ட பெண் போராளி, உடலில் இருந்து தனியாகத் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை... என்று கோரக் காட்சிகள் எதுவும் வெள்ளை வேன் கதையில் இல்லை. ஆனால், அவற்றைப் பார்த்து இன்றைய இலங்கையை நாம் உணர்ந்து கொள்வதைவிட வெள்ளை வேன் கதை மூலம் இன்னும் ஆழமாக உணர்ந்துகொள்ளலாம்.
மேலும், இலங்கையில் ஒரு மனிதனின் ஒருநாள் பொழுது, எத்தனை துயரம் மிக்கதாக... எத்தனை பதற்றம் நிறைந்ததாகக் கழிகிறது என்பதை மிக முக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறது.
'இலங்கையில் எல்லோரும் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சியால் எங்களுக்கு வரவில்லை. இங்கு அழுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அதனால் சிரிக்கிறோம்!’ - இந்த ஆவணப்படத்தில் சிங்கள கார்ட்டூனிஸ்ட் பிரகீத்தின் மனைவி உதிர்த்திருக்கும் வேதனை வார்த்தைகள் இவை.
'வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ ஆவணப்படத்தை, இலங்கை அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆவணமாகக் கொண்டுவந்திருக்கிற லீனா மணிமேகலையிடம் பேசினேன்...
''90-களில் இருந்து 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளாக இருந்தவர்களும் இல்லாதவர்களுமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல்போனார்கள். அந்த வகையில் கணவனை இழந்த, மகனை - மகளை இழந்த, சகோதரர்களை இழந்த, தந்தையை இழந்த, நண்பர்களை இழந்த உறவுகளின் போராட்டங்களும் கண்ணீரும்தான் 'வெள்ளை வேன் கதைகள்’. முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு போரின் பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது, இலங்கையில் அரசாங்கத்தால் களையப்படுகிறார்கள். உலக அரங்கில் ஈராக்குக்கு அடுத்ததாக காணாமல்போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. சேட்டிலைட் பிம்பங்களாகப் பார்த்தும் பத்திரிகைச் செய்திகளாகப் படித்தும் நாம் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையை, அந்த வலியுடன் உள்வாங்கும்போது பித்துப்பிடிக்கும்; ஆன்மா அலறும்; நெஞ்சு எரியும். அதை அப்படியே மடைமாற்றம் செய்யும் முயற்சியே இந்த ஆவணப்படம்!''
''இந்தப் படத்துக்காக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்று களப்பணி ஆற்றிய அனுபவம் எப்படி இருந்தது?''
''எதுவும் முயற்சித்தால் நடக்கும் நண்பா! வாய் நிறைய உணர்ச்சி பொங்கப் பேசும் பலர், ஒரு புல்லைக்கூட பிடுங்கிப்போடுவது இல்லை. போர் முடிவற்ற பிறகும், மக்கள் மனதில் ஒருவித கிலியைப் பீடிக்கவைத்திருப்பதில் ராஜபக்ஷே அரசாங்கம் முனைப்பாக உள்ளது. அரை மைலுக்கு ஒரு ராணுவ செக்போஸ்ட். ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகிறது. 'கொலை செய்யப்படுவீர்கள், மானபங்கப்படுத்தப்படுவீர்கள், கைது செய்யப்படுவீர்கள், காணாமல் போகடிக்கப்படுவீர்கள்’ என்று என்னைப் பல வகைகளில் எச்சரித்தனர். ஆனால், ஒரு கலைஞியின் குணம் பணிவது அல்ல; மீறுவது. நான் மீறினேன்!
நானும், ஒளிப்பதிவாளர் தம்பி அரவிந்தும்தான் படக்குழு. டவுன் பஸ்ஸில் பயணம் செய்து, கிடைக்கும் இடங்களில் தங்கி, சர்ச்சிலும் கோயிலிலும் சாலையிலும் தூங்கி, 'படம் எடுக்கிறோம்’ என்ற எந்தச் சலசலப்புகளும் இல்லாமல் எடுத்த படம் இது. இலங்கையின் ஜெஸ்யூட் பாதிரிமார்களும், மனித உரிமைப் போராளிகளும், எழுத்தாளத் தோழர்களும் எங்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்து அரவணைத்தார்கள்.  
படத்தில் பேசிய ஒரு பெண் போராளி, 'உங்களிடம் கதைத்தற்காக நான் கடத்தப்படலாம்’ என்று ஒரு வாக்குமூலம் அளித்திருக்கிறார். 'இவ்வளவு அழிவைப் பார்த்துவிட்டேன். இனி என்ன நான் பார்க்கவேண்டி இருக்கிறது. இந்த வாக்குமூலத்தை அளிப்பது எனது வரலாற்றுக் கடமை’ என்று அறிவித்தே, அவர் இந்தப் படத்தில் பங்குகொண்டார். அவர் இழந்த ஒரு கண்ணையும் கையையும் தடவிப் பார்த்தபோது, சத்தியத்தைத் தடவிப் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தச் சத்தியத்துக்காகவே அவர் வாழ்ந்து தீர்ப்பார். அவரைப் போலவே மற்றவர்களும் தாங்கள் இழப்பதற்கு வேறொன்றும் இல்லை என்ற மனநிலையில்தான், தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் நாடு கேட்கவில்லை, தங்கள் கண் முன்னே 'விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட, ராணுவத்திடம் சரண் அடைந்த உறவுகள் எங்கே?’ என்றுதான் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''
''உங்களின் ஒவ்வொரு முயற்சியும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பில் அக்கறை செலுத்துவதைவிடவும், பொருளாதாரரீதியில் உங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான முனைப்பாக இருக்கிறது என்ற விமர்சனம் குறித்து!?''
''என் ஏ.டி.எம். அட்டையைத் தருகிறேன்; கடவுச்சொல்லையும் தருகிறேன். நீங்களே சோதித்துப் பாருங்கள். ஒரு பத்திரிகையாளராக நீங்கள் வாங்கும் மாதச் சம்பளத் தொகைகூட என் கணக்கில் இருக்காது. அப்புறம் என்ன கேட்டீர்கள்... பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பா? அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். நான் ஒரு கதைசொல்லியாக என்னைப் பாதிக்கும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்!''
''அடிப்படைவாதிகள், இடதுசாரிகள், பகுத்தறிவுவாதிகள்... என, அனைத்துத் தரப்பினரும் உங்களை எதிர்க்கவோ விமர்சிக்கவோ செய்கிறார்கள். உங்களின் நிலைப்பாடுதான் என்ன?''
''நான் எந்தக் கருத்தியலுக்கும் அடிபணியாத படைப்பாளி, கலைஞி, சுதந்திரமான மனுஷி. இதை எந்தப் பிரிவினரால்தான் தாங்க முடியும்... சொல்லுங்கள்?''

-Vikatan

அரசுத் திட்டங்கள் + மானியங்கள் !

ஆ... சாமியோவ்!


பக்குவம் அடைந்த பற்றற்ற மனசு, ஏட்டுப் படிப்பைத் தாண்டிய எல்லை இல்லாத ஞானம், எளியவரின் சிரிப்பில் இறைவனைக் காணும் கண்கள்... என்று ஆன்மிக ஆசான்களை வரையறுப்​பார்கள். ஆனால் இன்று பலருக்கும் அந்தக் குணம் இல்லாமல் 'இதுவும் ஒரு பிசினஸ்’ என்பதுமாதிரி படோடாபமாக இறங்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை கார்பரேட் சாமியார்கள் என்று செல்லமாக அழைக்கிறார்கள். லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், தடையில்லாச் சான்றிதழ் என்று எதுவுமே தேவை இல்லாமல் அதிகமாக இவர்கள் உருவாகி வருகிறார்கள். வட இந்தியாவில் இந்த சாமியார்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடுகிறது.
 ஐந்நூறு ஏக்கரில் ஏர் கண்டிஷன் ஆசிரமம் கட்ட வேண்டும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... என்று நாடு, நாடாக பறக்க வேண்டும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஆடம்பரத்தை அனுபவிக்க வேண்டும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆஸ்தி படைத்தவர்கள், அழகிய சினிமா நட்சத்திரங்கள்... என்று அத்தனை பேரும் தன்னைச் சுற்றியிருக்க வேண்டும், அத்தனை சேனல்களிலும் அருள்வாக்கு சொல்ல வேண்டும். பத்திரிகைகள் எல்லாம் கார்பரேட் குரு என்று புகழ வேண்டும்... என்று நாடு முழுவதும் பல்வேறு நிறங்களில் ஆடைகள் பறக்க இந்த சாமியார்கள் புதிதுபுதிதாக பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
நெருங்கிய சொந்தங்களின் எதிர்பாராத இழப்பு, தீராத நோயின் வலி, வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டம், தோல்வி அடைந்த இல்லற வாழ்க்கையால் ஏற்படும் வெறுமை, பாவ மூட்டைகளின் சுமையைத் தாங்க முடியாது ஏற்படும் குற்ற உணர்வு... என்று கஷ்டப்படுகிறவர்களைத்தான் இதுபோன்ற சாமியார்கள் வாயாலேயே வலைவிரித்து தங்கள் கஸ்டமர்களாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
இவர்களின் அருள்வாக்குக்கு அப்பாவிகளிடம் செல்வாக்கு கூடக்கூட... இவர்கள் அதிகாரத் தரகில் இருந்து ஆயுதத் தரகு வரை தங்களின் சாம்ராஜ்ஜியத்தை, நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் வேகமாக விரிவாக்கிவிடுகிறார்கள். இந்த சாமியார்கள் ஆசைப்படும் அத்தனையும் வெகு சுலபமாக கிடைத்துவிடுவதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு பல்வேறு ஆசைகள் தலைதூக்குகின்றன. சாமியார்கள், தங்களின் பேராசைகளை சந்தடியில்லாமல் நிறைவேற்றிக்கொள்ள... ஒருசில அஜாக்கிரதையான, போலி சாமியார்களின் சாயம்தான் பாதியிலேயே வெளுத்துவிடுகிறது.
அத்தகைய சாமியார்களைத்தான் இந்தத் தொடரில் 'தரிசிக்க’ இருக்கிறோம். லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பதால், ஒரு பெண் சாமியாரில் இருந்தே ஆரம்பிப்போம்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 3-ம் தேதி மும்பையில் போரிவில்லிப் பகுதி திருவிழா கோலம் பூணும். காரணம், அன்றுதான் அன்னை ராதே மாவின் அவதாரத் திருநாள். இந்த நாளில் ராதே மாவின் ஆசிபெற அவரது பக்தகோடிகள் முட்டிமோதுவார்கள் என்பதால், இந்த ஆண்டு அவரது சிஷ்யகோடிகள் செய்த ஏற்பாடுகள் ஒன்று போதும்... ராதே மா யார் என்பதை புரிந்துகொள்ள!
'இரவு வானத்தில் பிரகாசமான தாமரை மலர் ஒன்று மலர வேண்டும். அந்தத் தாமரைப் பூவில் பிறை நிலா ஒன்று பிரகாசிக்க வேண்டும். அந்த நிலாவில் அமர்ந்து ராதே மா விண்ணில் இருந்து பூமிக்கு இறங்கிவர வேண்டும்.’ - ராதே மாவுக்கு இப்படி ஒரு 'இன்ட்ரோ சீன்’ வைக்க... சினிமா படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு ராட்ஷத கிரேன் கொண்டு, ராதே மா என்ற பற்றற்ற பெண் துறவியை விண்ணில் இருந்து மண்ணுக்கு நேரடியாக இறக்கினார்கள்.
வானில் இருந்து இறங்கி வரும் தேவதையாகவே இருந்தாலும், வெள்ளை நிறம் எல்லாம் கூடாது என்று சொல்லிவிட்டு, எப்போதும்போல தகதகவென்று ஜோலிக்கும் தனது சிவப்பு நிற டிசைன் சேலையிலும், கிலோ கணக்கிலான தங்க, வைர நகைகளிலும் பிரகாசித்தார் ராதே மா. அவரது அழகுக்கு அழகு கூட்ட எப்போதும்போலவே, பல மணி நேரம் செலவுசெய்து பிரைடல் மேக்கப் போட்டிருந்தார். முக்காலமும் ஆட்சிசெய்யும் மாகாளியாவே ராதே மா-வை அவரது பக்தர்கள் பார்ப்பதால், அவர் வழக்கம்போல தனது மினியேச்சர் திரிசூலத்தையும் மறக்காமல் ஒரு ஆபரணத்தைப்போல எடுத்துவர... இசையருவியோடு பக்தி அருவி மிக்ஸ் ஆனது.
ராதே மா-வையும் அவரது பக்தர்களையும் பரவச நிலைக்கு கொண்டுபோவது பக்திப் பாடல்கள்தான். ஆயிரம் வாட் ஸ்பீக்கர்களில் இசை வழிய... ராதே மா வழக்கத்தைவிட மகிழ்ச்சியோடு அன்று ஆனந்த தாண்டவம் புரிந்தார். இப்படி ராதே மா நாட்டியமிடும்போது, அவரது பக்தர்கள் பக்தி பரவச நிலையை அடைந்து, ராதே மா-வை இரு கைகளாலும் ஜாக்கிரதையாக அனைத்து அலேக்காக தூக்குவதும்... அந்த நிலையில் பக்தனின் தலை மீது தனது வலது கையை வைத்து ராதே மா ஆசீர்வாதம் கொடுக்கும் பக்தி நிகழ்வும் வழக்கம்போலவே அன்றும் நடந்தது. ஆனால், ஒரே வித்தியாசம்... மற்ற நாட்கள் என்றால், ராதே மா-வை இப்படி தூக்கி முக்திபெறும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அன்று விசேஷமான நாள் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
'வெளிப்பார்வைக்கு இப்படி பகட்டாக இருப்பதால், ராதே மா-வை அவசரப்பட்டு ஃபைவ் ஸ்டார் பெண் சாமியார் என்று தவறாக எடைபோட்டுவிடக் கூடாது’ என்கிறார்கள்.காரணம்... தங்கத்தைவிட அதிகமாக விலை உள்ள மும்பையின் பரபரப்பான பகுதியில் இவரது ஆசிரமம் இருந்​தாலும், அது அவருக்கு சொந்தமானது இல்லை. கால்பந்தாட்ட மைதானத்​தின் அளவில் இருக்கும் பல மாடிகளைக் கொண்ட பளிங்கினால் ஆன அந்த குளுகுளு பங்களா, அவரது பரம சீடரான குப்தா என்பவருக்குச் சொந்தமானது.
43 வயதாகும் ராதே மா-வின் ரிஷிமூலம்தான் என்ன? பஞ்சாப் மாநிலத்தில் வசதிமிக்க, அரசாங்க உயர் அதிகாரிக்கு மகளாகப் பிறந்தவர்தான் ராதே மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் சுக்வீந்தர் கவுர்.அவர் சிறுமியாக இருக்கும்போதே தாயை இழந்ததால், அப்பா அவரைச் செல்லமாக வளர்த்தார். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஊர் வழக்கப்படி திருமணமும் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்தன. குழந்தைகள் பிறந்த கையோடு, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதற்காக கணவர் அரபு நாட்டுக்குச் சென்றுவிட்டதால், ஊரில் இருந்த மாகாளி கோயிலில் ராதே மா நிறைய நேரம் செலவிட்டார். அந்த நேரம் ஊரில் இருந்த மஹா தீன்தாஸ் என்ற துறவி, சுக்வீந்தர் கவுருக்கு ராதே மா என்று திருநாமகரணம் சூட்டி இறைவழியில் ஈடுபடுத்தினார். ஒருநாள் ராதே மா-வின் கனவில் கடவுள் தோன்றி, 'யார் ஒருவர் உண்மையான பக்தியோடும் தூய்மையான மனதோடும் மாகாளியின் ஒன்பது திருத்தலங்களுக்கும் சென்றுவிட்டு கடைசியாக உன்னை வந்து தரிசிக்கிறார்களோ... அவர்களது வேண்டுதல் நிறைவேறும்’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனாராம். இவ்வளவு போதாதா..? ராதே மா-வின் புகழ் பஞ்சாப் முழுவதும் பரவி, பக்கத்தில் இருக்கும் டெல்லியையும் அடைந்தது. டெல்லியில் ராதே மா-வை சந்தித்த இவரது பரம பக்தரான குப்தா என்பவர், தனது குருமாதா எப்போதும் தன் குடும்பத்தோடு தனது பங்களாவிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பப்பட... ராதே மா தனது சிஷ்யரின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும் விதமாக மும்பைக்கு இடம்பெயர்ந்தார். குப்தா ஒரு விளம்பர நிறுவனத்துக்கும் அதிபர் என்பதால்... ராதே மா-வுக்கு விளம்பரத்துக்குப் பஞ்சமே இல்லை.
வாழ்க்கையில் சகலவிதமான வசதிகள் இருந்தும் ராதே மா-வுக்கு ஒரு குறை உண்டு. 'மஹா மண்டலேஷ்வரர்’ என்ற பட்டத்தை அவர் தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். மாதாஜி விரும்புவது எதுவானாலும் அதை வாங்கிக் கொடுக்கும் செல்வமும் செல்வாக்கும் கொண்ட பக்தர்கள் இருப்பதால், ராதா மா-வை அந்தப் பட்டமும் தேடி வந்தது. என்றாலும், 'கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து இந்தப் பட்டத்தை வாங்கினார்’ என்ற குற்றச்சாட்டும் கூடவே வந்தது. இந்தப் பட்டம், 'தம்பட்டம்’ என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் தனது கோடீஸ்வர பக்தர்களின் மனதைக் குளிர்விக்க இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், அவர்களுக்கு ஆங்கிலத்தில் அருள்வாக்கு சொல்ல வேண்டியிருப்பதாலும், இப்போது இவர் தீவிரமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறார். ராதே மா அடிக்கடி சொல்லும் மஹா வாக்கியம்: 'ஐ லவ் யூ ஃப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!’
- முகத்திரை விலகும்!
-Vikatan

தங்கமே தங்கம்! ஒரு ‘நகைமுரண்’ பார்வை

ங்கத்திலேயே கோயில் கட்டுகிறார்கள் வேலூரில்; சாமியாருக்குக் கனவு வந்தது என்று தங்கப் புதையலைத் தேடி பூமியைத் தோண்டுகின்றனர் உத்தரப்பிரதேசத்தில்; 'தாலிக்குத் தங்கம்’ தருகிறது தமிழக அரசு; மகளின் திருமணத்துக்கு மாதம் 500 ரூபாய் நகைச் சீட்டு கட்டுகிறார் காய்கறி மார்க்கெட் தொழிலாளி... இப்படி எங்கெங்கும் தங்க மோகம்!
இந்தப் பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களில் தங்கமும் ஒன்று. ஆனால், எப்படியோ அது மனிதகுலத்தை வசீகரித்து விட்டது.
'எல்லாம் என்னுடையது’ என்றது தங்கம்.
'எல்லாம் என்னுடையது’ என்றது வாள்.
'என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’ என்றது தங்கம்.
'என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’ என்றது வாள்.
- ரஷ்ய கவிஞர் புஷ்கினின் இந்தக் கவிதை, யுத்தத்துக்கும் தங்கத்துக்குமான தொடர்பை விவரிக்கிறது.
இப்போதும் இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதக் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம். இந்தியர்களின் தங்க மோகம் வேறுபட்டது. தங்கம் என்பது, இங்கு சமூக கௌரவம்; சென்டிமென்ட். உலக அளவில் இதுவரை
சுமார் 17 கோடி கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தின் அளவு, சுமார் 1,87,00,000 கிலோ. சுமார் 11 சதவிகிதம்!
தங்க மோகம்... பின்னணி என்ன?
மக்கள் ஏன் தங்கம் வாங்கு கிறார்கள்? முதலீடு, சேமிப்பு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதன் மீது இனம்புரியாத ஓர் ஈர்ப்பு. வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தில் இந்தத் தகதகக்கும் மஞ்சள் உலோகத்தின் மீது மனிதகுலத்துக்கு மோகம் வந்துவிட்டது. அது காலந்தோறும் அரசர்கள், செல்வந்தர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்... என சகல பிரிவினரையும் ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும், 500 ரூபாய்க்கு நகைச் சீட்டுப் போட்டு குண்டுமணித் தங்கமேனும் வாங்க முயற்சிக்கின்றனர். காலத்தின் வளர்சிதை மாற்றங்களில் எத்தனையோ நம்பிக்கைகள், பழக்கங்கள், கருத்துகள் மாறியபோதிலும் தங்க மோகம் இன்னும் தொடர்வதுடன், மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
திருமணப் பேச்சின் முதல் கேள்வியே, 'எத்தனை பவுன் நகைப் போடுவாங்க?’ என்பதில்தான் தொடங்குகிறது. தங்கள் மகளுக்கு இத்தனை பவுன் நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தால்தான் அவளுக்கும் தங்களுக்கும் கௌவரம் என்று பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் பெண் குழந்தை பிறந்த உடனேயே, அவளுக்காக நகை சேர்க்கத் தொடங்குகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் திருமணச் செலவுக்குப் பணம் சேர்ப்பதிலேயே கழிக்கின்றனர். வேறு விருப்பங்கள் பற்றி அவர்கள் சிந்திக்கவே முடியாது. இது எவ்வளவு பெரிய மன அழுத்தம்? 'இனிமேல் திருமணத்தின்போது பெண்களுக்கு நகைப் போடத் தேவை இல்லை’ என்ற நிலை இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனையே எத்தனை சுகமாக இருக்கிறது?!
வேட்கையைத் தூண்டும் விளம்பரங்கள்!
1990-ம் ஆண்டு வரையில் இந்தத் தங்க மோகம் வரம்புக்கு உட்பட்டே இருந்தது. இந்தியாவில் 91-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, தங்க இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அந்தச் சமயம் 100 கோடியை எட்டிப்பிடிக்கும் தொலைவில் இருந்த இந்திய மக்கள்தொகையை, கொழுத்த வியாபார வாய்ப்பாகப் பார்த்தார்கள் தங்க வியாபாரிகள். இந்தியா முழுவதும் பெரும் தங்க நகைக் கடைகள் படையெடுத்தன. ஏற்கெனவே இந்தியர்கள் இந்த 'மஞ்சள் பிசாசின்’ மீது  கொண்டிருந்த காதலை, தங்கள் விளம்பரங்கள் மூலம் பித்து நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அட்சயத் திருதியை போன்ற நாட்களைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஆளுக்கொரு நகைக்கடைக்கு விளம்பரம் செய்கிறார்கள். சென்னையில் குழந்தைகளுக்கான நகைகளை விற்பதற்கு என்றே தனியே கடை இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்பதைத் தாண்டி சமூக அந்தஸ்துக்கான அச்சாரமாக்கப்பட்டது தங்க மோகம்!

அவர்கள் என்ன ஆனார்கள்?
20 வருடங்களுக்கு முன்பு நகைக் கடை என்றால் எப்படி இருக்கும்? ஒரு சிறிய அறை, அதில் கண்ணாடித் தடுப்புக்கும் கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட நகைகள், சந்தனப்பொட்டு வைத்து, வெள்ளை வேட்டி சட்டையில் வாய் நிறையப் புன்னகையுடன் வரவேற்கும் கடைக்காரர், நம்பிக்கையின் பேரில் கடனுக்குக்கூட நடந்த வியாபாரம், ரோஸ் நிறக் காகிதத்தில் மடித்துத் தரப்படும் நகைகள், கடையின் பெயர் அச்சிடப்பட்ட மணி பர்ஸ், மஞ்சள் பை... இந்தக் காட்சிகள் இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன. இப்போது நகைக் கடைகள், பிரமாண்டமாக இருக்கின்றன. மூன்று, நான்கு தளங்களில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் நகைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 'இத்துணூண்டு நகையை விற்க இவ்வளவு பெரிய கடை எதற்கு?’ என்று நீங்கள்கூட நினைத்திருக்கலாம். ஆனால், எத்தனை நகைக் கடைகள் திறந்தாலும் காலை 10 மணிக்கே அதன் வாசலில் 10 பேர் நிற்கத்தான் செய்கின்றனர்.
முன்பு ஒவ்வோர் ஊரிலும் நகைக் கடை வீதி ஒன்று இருக்கும். உதாரணமாக கோவையில் டவுன்ஹால், மதுரையில் பச்சரிசிக்காரத் தெரு, தஞ்சையில் காசுக்கடை வீதி... என்று நகைப் பட்டறைகளுக்காகவே பெயர்பெற்ற வீதிகள் இருந்தன. இன்று அந்த வீதிகள் மட்டுமே இருக்கின்றன. பட்டறைகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றில் வேலை செய்தவர்களில் 90 சதவிகிதத்தினர் வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர். பிரமாண்ட நிறுவனங்களின் விஸ்வரூபத்துக்கு முன்னால் சிறு வியாபாரிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனில், இன்றைய நகைக் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் விதம் விதமான நகைகளை யார்தான் செய்வது? இது, துயரமான ஒரு பதிலுக்கான கேள்வி.
முன்பு சொந்தமாக நகைப் பட்டறைகள் வைத்திருந்தவர்கள்தான், இப்போதைய பிரமாண்ட நகைக் கடைகளுக்கான பட்டறைகளில் கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். 1995-க்குப் பிறகு படையெடுத்த 'தங்க மாளிகை’களை எதிர்கொண்டு இவர்களால் தொழில் நடத்த முடியவில்லை. பட்டறையை மூடிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேலைகளுக்கு மாறத் தொடங்கினர். அதிலும் தாக்குப்பிடித்து நின்றவர்களை, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு படையெடுக்கத் தொடங்கிய பிரமாண்ட சங்கிலித் தொடர் நகை நிறுவனங்கள் அடியோடு துடைத்து வீசிவிட்டன. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 1999-ம் ஆண்டு வாக்கில் நூற்றுக்கணக்கான நகைப் பட்டறைத் தொழிலாளர்கள், நகைத் தொழிலில் பயன்படுத்தப்படும் சயனைடு உண்டு தற்கொலை செய்துகொண்டனர். இது அப்போது பரபரப்பான செய்தியானது. எஞ்சியவர்களுக்கு, வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நகை வேலை மட்டுமே. அவர்கள் அத்தனை பேரும் பெரும் நிறுவனங்களின் தொழிற்கூடங்களில் சரணடைந்தனர். இப்போதைய பிரமாண்ட நகை நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவில் பணிபுரிவதில் முக்கால்வாசி பேர் இவர்கள்தான்.
இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் போக, 'இவ்வளவு நகை செய்தால், இவ்வளவு ரூபாய் ஊக்கத்தொகை’ என்று நிர்ணயிக்கப்படுகிறது. அந்த ஊக்கத் தொகையைக் கூடுதலாகப் பெறுவதற்காக இரவும் பகலும் பணிபுரிகின்றனர். அட்சயதிருதியை, முகூர்த்த நாட்கள்... போன்ற சமயங்களில் இவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும். தங்கத் துகள்களைக் கவர்ந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காகக் கடும் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். வேலை செய்யும் இடம் காற்றுப் புக வழி இல்லாத, நான்கு புறமும் அடைக்கப்பட்ட அறையாகவே இருக்கும். வேதிப்பொருள்களை நாள் முழுக்க சுவாசிக்க வேண்டியிருக்கும். இதனால் இந்தத் தொழிலில் உள்ளவர்களை ஆஸ்துமா, மூலவியாதி, தோல் நோய்கள்... போன்றவை எளிதில் தாக்குகின்றன. நாம் வாங்கும் தங்கம் ஜொலிக்கலாம். ஆனால், அதை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ மங்கிக்கிடக்கிறது!
தங்கம் லாபம்... ஆனால், சரியானதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறுமுகத்திலேயே இருக்கும் விலைதான், தங்கத்தை உலக மக்களின் நம்பிக்கைக்குரிய முதலீட்டுத் தேர்வாக வைத்திருக்கிறது. பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் மக்கள் இதைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், தங்கத்தின் இருப்பு என்பது வரம்புக்கு உட்பட்டது.
ஒவ்வொரு நாளும் உலகின் தங்கத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக அளவில் தங்க உற்பத்தி ஆண்டொன்றுக்கு 2,450 டன். ஆனால், தேவை, 3,550 டன். பற்றாக்குறை, 1,100 டன். இந்தப் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்தபடியே இருக்கும். மேலும், தங்கத்தைத் தேடி பூமியின் அடி ஆழத்துக்குச் செல்லச் செல்ல.. அதற்கான செலவும் அதிகரிக்கும். எனவே, தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி, இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் ஏறுமுகமாகவே இருக்கும் என்பது இந்தத் துறை நிபுணர்களின் கருத்து. அதாவது, அவர்கள் ஒரு முதலீடு என்ற கோணத்தில் தங்கத்தை வாங்குவது லாபகரமானது என்கிறார்கள். லாபமாக இருக்கலாம்; ஆனால், சமூக நலன் நோக்கில் இது சரியானதா?
'தங்கம் என்பது ஒரு கனிமம். அதில் இருந்து வேறு எதுவும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. வெறுமனே லாபத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதில் கொட்டப்படும் பல லட்சம் கோடி ரூபாயை, ஆக்கபூர்வமான வேறு துறைகளுக்குப் பயன்படுத்தலாம். மின்சாரம், விவசாயம், கட்டுமானம், தொழிற்துறை போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளில் இந்தப் பணம் பாயும்போது, அதனால் மக்களுக்குப் பயன் உண்டு. மாறாக, தங்கத்தை வாங்கிக் குவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. இது, மூலதனத்தை முடக்கும் செயல். இதில் கிடைப்பதாகச் சொல்லப்படும் லாபம் என்பது, செயற்கையான யூக லாபம். தங்கத்தை ஒரு சேமிப்பு என்ற அளவில் வாங்குவது வரை சரி. முதலீடு என்ற கோணத்தில் தங்கம் வாங்குவது, சமூக நலன் நோக்கில் சரியானது இல்லை!’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மக்கள் தங்கத்தை ஏராளமாக வாங்கிக் குவிப்பதால் வேறொரு பிரச்னையும் இருக்கிறது. 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை’ என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக் கூடியது. இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு என்ற நிலையில், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. இது, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 2.5 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. அதுதான் ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால், இந்தியாவில் இது, 4 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதற்கு, தாறுமாறான தங்க இறக்குமதியும் ஒரு முக்கியக் காரணம். இந்தியத் தங்கத் தேவையின் 97 சதவிகிதம் இறக்குமதிதான்.
கீழே உள்ள கணக்கைப் பாருங்கள். இது ஒவ்வோர் ஆண்டும் இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு...
2007            7,59,000 கிலோ
2008            4,81,000 கிலோ
2009            5,78,000 கிலோ
2010            9,63,000 கிலோ
2011            9,86,000 கிலோ
2012            8,00,000 கிலோ
ஆனால், உலகமே இப்படித்தான் இருக்கிறது என்பதால், 'எந்த நாடு அதிகமான தங்கம் வைத்திருக்கிறதோ... அந்த நாடுதான் பிஸ்தா’ என்ற நிலைதான் நிலவுகிறது. ஏனெனில், பொருளாதாரத் தள்ளாட்டம் எல்லா நாடுகளையும் பீடித்து வருகிறது. இந்தச் சூழலில், தத்தமது நாட்டு கரன்சிகளை நம்புவதைவிட, தங்கத்தை நம்புவதைத்தான் நாடுகள் விரும்புகின்றன. இதனால் பல நாடுகள் தங்களின் கையிருப்புத் தங்கத்தை, வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம் உயர்த்திக்கொள்கின்றன. உலக அளவில் அதிகத் தங்க கையிருப்புகொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இப்போது 11-வது இடம்!
அதிகரிக்கும் அடகுக் கடைகள்!
தங்க நகைக் கடைகள் மட்டும் அதிகரிக்கவில்லை. அடகுக் கடைகளும் தெருவுக்கு நான்காக முளைத்துள்ளன. அவை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. அந்தப் பக்கம் சினிமா நட்சத்திரங்களை வைத்து தங்கம் விற்பவர்கள், இந்தப் பக்கம் அவர்களைக்கொண்டே, அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள். தெருவுக்கு நான்கு நகைக் கடைகள் முளைக்க மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான் காரணம் என்றால், தெருவுக்கு எட்டு அடகுக் கடைகள் முளைக்க என்ன காரணம்?
ஏனெனில், புதிய தாராளமயக் கொள்கை ஒரு பகுதி நடுத்தரவர்க்க மக்களைச் செழுமைப்படுத்தி இருக்கும் அதே சமயம், பெரும்பான்மை மக்களை இறுக்கிப் பிடிக்கிறது. கல்வி, மருத்துவம், அன்றாடச் செலவுகள் அதிகரித்துவிட்டன. எனவே, மக்கள் வாங்கிய நகைகளை அடகுக் கடைகளை நோக்கிக் கொண்டுசெல்கின்றனர். பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க, அடகுக்கடைகளும் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, 'முத்தூட் ஃபைனான்ஸ்’ நிறுவனம்தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 4,000 கிளைகள் உள்ளன. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கு 2,100 கிளைகள் மட்டுமே உள்ளன. 2009-ம் ஆண்டு முத்தூட் நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான நான்கு ஆண்டுகளில் 3,000 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கிளைகள். அதிலும் 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மட்டும் இந்த நிறுவனம் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 'ஆத்திர அவசரத்துக்குப் பயன்படுமே’ என்ற எண்ணத்துடன்தான் தங்கம் வாங்குகின்றனர். அந்த 'ஆத்திர அவசரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதற்கு மேலே உள்ள புள்ளிவிவரமே சாட்சி. பெரும்பான்மையான நகைக் கடைகளின் பூர்விகம் கேரளாதான். அதேபோல பெரும்பான்மையான நகை அடகுக் கடைகளுக்கும் கேரளாதான் பூர்விகம். உடம்பு முழுக்க நகைகளை அணிவித்து, பெண்களை நடமாடும் நகைக் கடையைப் போல வலம்வரச் செய்வதும் கேரளப் பாரம்பரியம்தான். இந்தியாவிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளாதான் என்பது இதில் உள்ள நகைமுரண்.
என்னவென்று சொல்வது... செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பி.எஸ்.ஐ., கே.டி.எம்., ரேட்கார்டு, பிரைஸ் டாக், க்ளியர் பிரைஸ் டாக், புரட்சி, போராட்டம்!