Saturday, December 14, 2013

This Blog Page view status


Pageviews by Countries

Graph of most popular countries among blog viewers
EntryPageviews
India
886
United States
344
Sri Lanka
59
United Arab Emirates
32
Russia
24
Qatar
23
Germany
18
Bahrain
17
United Kingdom
15
Oman
13

Pageviews by Browsers

EntryPageviews
Chrome
827 (50%)
Firefox
347 (20%)
Internet Explorer
243 (14%)
Opera
138 (8%)
Mobile Safari
33 (1%)
Maxthon
32 (1%)
Safari
23 (1%)
NetFront
4 (<1%)
UniversalFeedParser
4 (<1%)
OS;FBSV
3 (<1%)
Image displaying most popular browsers

Pageviews by Operating Systems

EntryPageviews
Windows
1128 (75%)
Macintosh
146 (9%)
Linux
117 (7%)
Android
36 (2%)
iPad
19 (1%)
Nokia
16 (1%)
Other Unix
11 (<1%)
iPhone
7 (<1%)
Samsung
4 (<1%)
windows
2 (<1%)
Image displaying most popular platforms

தமிழகம்... இருளகம்!

மின்வெட்டில் புதுப்புது பரிமாணங்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கிறது தமிழக அரசு. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம், எட்டு மணி நேரம் என்று தாவித் தாவி, 12 மணி நேர மின்தடை என மிரட்டுகிறது நிலவரம். அதிலும் முன்னர் கோடை காலத்தில் தான் மின்வெட்டு நிகழும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலத்திலேயே குறிவைத்து வெளுக்கிறார்கள்!  
'பருவமழை பொழிந்தால் சரியாகும்’ என்றார்கள். பிறகு, 'காற்று வீசினால் கரன்ட் வரும்’ என்றார்கள். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இடையில் சில காலம் 'பரவாயில்லை’ ரேஞ்சில் இருந்த மின்வெட்டு, இப்போது தமிழகத்தை மறுபடியும் இருண்ட காலத்துக்குத் தள்ளியிருக்கிறது. சென்னையில் இரண்டு மணி நேரம், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் அனைத்திலும் 12 மணி நேரம் மின்வெட்டு. சென்னைவாசிகள் தவிர்த்தவர்கள் நரகத்தில் வாழ்வதைப்போல் தத்தளிக்கின்றனர்!
இருண்ட தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
''சமையல்கூட பண்ண முடியலைங்க. தேங்காய் சட்னியை அரைக்கும்போதே பாதியில் கரன்ட் போயிடுது. பசிக்கும்போது சமையல் செஞ்சு சாப்பிட்டதுபோக, கரன்ட் இருக்கும்போது சமையல் செய்யவேண்டியதா இருக்கு. எதையும் சூடா செஞ்சு சாப்பிட முடியலை. தொட்டியில தண்ணி ஏத்த முடியலை. எனக்குக் குழந்தை பிறந்து 10 மாசம்தான் ஆகுது. குழந்தை தூங்கணுமேனு இன்வெர்ட்டர் போட்டோம். ஆனா, அது சார்ஜ் ஆகக்கூட கரன்ட் வர மாட்டேங்குது!'' என்று அலுத்துச் சலிக்கிறார் மதுரையில் வசிக்கும் சைந்தவி.
காற்றாலை மின் உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே எட்டு மணி நேர மின்வெட்டு. '''கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி ஆரம்பிச்சிருச்சு’னு சொல்றாங்க... ஆனா, உற்பத்தியாகும் மின்சாரம் எங்கே போகுதுன்னே தெரியலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை எதுவும் கிடையாது. ரப்பர், தென்னை விவசாயம், மீன் பிடி... இந்த மூணும்தான் பிரதானத் தொழில். ஆனா, இப்போ மூணுமே முடங்கிக்கிடக்கு!'' என்கிறார் குமரிவாசி பிரான்சிஸ்.
பொதுவாக மின் தேவையை வீட்டுத் தேவை, விவசாயத் தேவை, தொழில் தேவை, வியாபாரத் தேவை என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு தரப்பினருமே இன்று மின்வெட்டால் கதிகலங்கி நிற்கிறார்கள்.
கடலூர் துறைமுகம், மிக முக்கியமான மீன்பிடிக் கேந்திரம். மீன்பிடித் தொழிலை நம்பி இங்கு பல உபதொழில்களும் நடக்கின்றன. ''பல மணி நேர மின்வெட்டு காரணமாக, மீன்களைப் பதப்படுத்தத் தேவையான ஐஸ் தயாரிக்கும் தொழில் முடங்கியிருக்கிறது. ஜெனரேட்டர் உதவியுடன் உற்பத்தி செய்தால், ஒரு பார் ஐஸுக்கே மீன் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், கடலில் கஷ்டப்பட்டுப் பிடித்த மீன்களைச் சேமித்து வைத்து விற்க முடியவில்லை. கடலை நம்பி நடத்தப்படும் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன'' என்கிறார் கடலூரைச் சார்ந்த பத்மநாபன்.
சிவகாசியில் தீப்பெட்டி - அச்சுத் தொழிலும், கோவையில் இயந்திரத் தொழிலும், ஈரோடு, கரூர், பின்னலாடைத் தொழிலும், நாமக்கல் முட்டைத் தொழிலும், கல்லிடைக்குறிச்சி அப்பளத் தொழிலும், திண்டுக்கல் பூட்டுத் தொழிலும் முடங்கியிருக்கின்றன. டாலர் நகரமான திருப்பூரிலும் இதே நிலைதான்.
'பவர்கட்’ என்று பேசத் தொடங்கியதுமே பெரும் சலிப்புடன் பேசுகிறார் திருப்பூரில் அச்சுக்கூடம் நடத்தும் எழில் சுப்பிரமணியன்.
''பஞ்சு ஆலையில் நெய்யப்படும் நூல், நூற்பாலைக்கு வந்து தொழிற்சாலையில் துணியாகி, சலவைப்பட்டறைகளில் பிளீச்சிங் செய்யப்பட்டு, டையிங், கேஸ்டிங், எம்பிராய்டரி என்று ஒரு சட்டையாக உருமாறி, அதை அட்டைக்குள் அடைத்து லேபிள் ஒட்டும் வரை... ஒரு சாதாரண சட்டையை உருவாக்கவே பல நிலைகளில்  மின்சாரம் தேவை. ஆனா, அப்பப்போ சில மணி நேரங்கள் மட்டுமே வரும் மின்சாரத்தை நம்பி ஒரு சட்டைகூட தயாரிக்க முடியலை. அதுவும் நூல் ஓடிட்டு இருக்கும்போது பாதியில மின்சாரம் போச்சுனா, அந்த லாட் அவ்வளவுதான்.
சட்டு சட்டுனு கரன்ட் போயிட்டு வந்துட்டும் இருப்பதால், இயந்திரங்களும் அடி வாங்கிருது. இதனால் குறு, சிறு, நடுத்தர ஆலை முதலாளிகள் தொழிலை மூடிட்டு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. இதனால பல்லாயிரம் கூலித் தொழிலாளர்களுக்கும் வேலை போகும். அதனால்தான் நாங்க, 'மின்தடை இல்லா மின் விடுமுறை கொடுங்க’னு கேட்குறோம். அதாவது வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இத்தனை மணி நேரத்தில் இருந்து இத்தனை மணி நேரம் வரை மின்வெட்டு இருக்காது. மத்த நாட்கள்ல வழக்கத்தைவிட அதிகமா இருக்கும்னு சொல்லிட்டா, குறிப்பிட்ட நாள்ல மட்டும் இயந்திரத்துக்குச் சேதாரம் இல்லாம தொழில் நடத்துவோம். ஆனா, இதை யாரும் கேட்பார் இல்லை!'' என்று ஆற்றாமையுடன் பொருமுகிறார் அந்தச் சிறு முதலாளி.
தமிழகத்தில் தயாராகும் மின்சாரத்தைப் பயன்படுத்த உள்ளூர் நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடைஇல்லா மின்சாரம் தருவதுடன், எப்போதேனும் தப்பித்தவறி மின்தடை ஏற்பட்டால், அதற்காக அரசு அவர்களுக்கு இழப்பீடு தர ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், உள்ளூர் தொழில்முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அரசு அபராதம் விதிக்கும்.
இதைவிடவும் அதிர்ச்சியான செய்தி ஒன்று தொழில்முனைவோருக்குக் காத்திருக்கிறது. 2003-ல் மத்திய அரசு கொண்டுவந்த மின்சாரச் சட்டத்தின் ஓர் அங்கமாக, விரைவில் மின்சார வினியோகம் 25 ஆண்டுகளுக்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மக்கள் வரிப் பணத்தில் மெள்ள, மெள்ளக் கட்டமைக்கப்பட்ட மின் வினியோக அமைப்பை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள தனியார்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். மாநில அரசுகளின் கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது மின்கொள்கை. இப்படி மின் வினியோகத்தில் தனியார் நுழைந்தால், நிலைமை இன்னும் படுமோசம் ஆகும் என்பது உறுதி.
தமிழகத்தின் சகல தேவைகளுக்கும் தோராயமாக 12,000 மெகாவாட் மின்சாரம் தேவை. இப்போதைக்கு 8,000 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை 4,000 மெகாவாட்தான் மின்வெட்டு மூலமாகச் சமாளிக்கப்படுகிறது. நிலவரத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்க, குஜராத் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அங்கு இருந்து மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதுதான் மின்சார உற்பத்தி, பயன்பாடு குறித்து தமிழக அரசு தெரிவிக்கும் நிலவரம். ஆனால், அதன் பின்னணி குறித்தும் அதிர்ச்சி கிளப்புகிறார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் பொறியாளர் காந்தி.  
''சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட மின்சார வழங்கல் சட்டம், மின்சார வினியோகத்தை பொதுத் துறை நிறுவனங்கள் வசமாக்கியது. 1948-ல் இருந்து 1973-ம் ஆண்டு வரை மத்திய அரசைவிட மாநில அரசுகளே மின் வினியோகத்தில் கோலோச்சின. மாநில மின்வாரியங்களும் கடன் இன்றி இயங்கின. 73-ல் மத்திய அரசு சில பவர் கார்ப்பரேஷன்களை உருவாக்கியது. 90-களில் புதிய மின் உற்பத்திக்கான முதலீட்டுத் தொகை அரசிடம் இல்லை என்றும், தனியாரிடம்தான் உள்ளது என்றும் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி, 1998-ல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது.
தனியாருக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்ட அதேநேரம், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதியும் வழங்கவில்லை. அதுவரை மாநில அரசுகள் கையாண்டுவந்த மின் வினியோக உரிமையையும் முழுமையாகக் கட்டுப்படுத்திய மத்திய அரசு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களின் மின்வினியோக உரிமைகளைத் தனியாரிடம் கொடுத்தது. தமிழகத்தில் அப்போது ஆட்சி செய்த தி.மு.க., ஏழு தனியார் மின் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தது. இந்தத் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் 15 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 1 யூனிட் 18 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, பின்னர் ஏழு, எட்டு ரூபாய் அளவுக்குக் கொண்டுவந்தார்கள். இதற்கிடையில், 2003-ல் மின்சாரச் சட்டம் கொண்டுவந்து மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றது மத்திய அரசு. ஒரு பக்கம் தனியார்கள், இன்னொரு பக்கம் அதிகாரமற்ற மாநில மின்வாரியம் என, 'மின்சாரம்’ மக்களின் அடிப்படைத் தேவை என்ற நிலையிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் பணம் கொழிக்கும் ஒரு பண்டமாக மாறத் தொடங்கியது அப்போது இருந்துதான்.
இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியில் 46 சதவிகிதம் தமிழகத்தின் பங்கு. ஆனால், இதன் மூலம் சில மாதங்களைச் சமாளிக்க முடிகிறதே தவிர, நிரந்தரமாக மின்வெட்டைச் சமாளிக்க முடியாது. கோடையோ, மழையோ தங்குதடையற்ற மின்சாரத்தை எப்போது வழங்க முடிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறும்!'' என்கிறார் காந்தி.
31.3.2011 நிலவரப்படி, தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்த இழப்பு சுமார் 40,375 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். தனியாரிடம் தமிழக அரசு வாங்கும் மின்சாரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 10,000 கோடியைக் கொட்டிக்கொடுக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இது 70 சதவிகிதம்!
அனுதினம் அல்லும்பகலும் மின்வெட்டு காரணமாக தமிழக மக்கள் நொந்துகொண்டிருக்க, 'மின்தடை எப்போது நீங்கும்?’ என்று விளக்கம் அளிக்க அரசாங்கத் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ யாரும் தயாராக இல்லை. மின்சாரத் துறை அமைச்சர் 'நத்தம்’ விஸ்வநாதனிடம் விளக்கம் பெற பல முயற்சிகள் எடுத்தும் பலிக்கவில்லை. மின்வாரியத் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க முன்வர முடியாத பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தனர். இவர்களின் இத்தனை பரபரப்பு செயல்பாடுகளுக்கு இந்நேரம் எக்குதப்பு மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் அனலாகப் பொழிந்திருக்க வேண்டும். ஹ்ம்ம்..!  
கடும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு மின்வாரிய அதிகாரியிடம் பேசினேன். தன் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார் அவர். ''தமிழகத்தில் பழுதடைந்துள்ள அனல்மின் நிலையங்களைச் சரிசெய்ய ஐந்து புதிய இயந்திரங்கள் வாங்கிப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களைச் சரிசெய்து புதிய உற்பத்திகளும் வந்தால், தமிழகத்தில் மின்வெட்டு விரைந்து சரியாகிவிடும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் 400 மெகாவாட் மின்சாரத்தில், 200 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. முழு வீச்சில் அணு உலை உற்பத்தியைக் கொடுத்தால், அதுவும் சேர்ந்து அடுத்த சில மாதங்களில் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். மற்றபடி இந்த மின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் மக்களுக்கு மின்சாரம் கொடுக்கவும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதியின் பேரில் சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் வாங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது தவிர்க்க முடியாதது!' என்று பட்டும்படாமல் முடித்துக்கொண்டார்.
ஒட்டுமொத்த தமிழகமும் மின்சாரம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்க, ஏற்காட்டில் மட்டும் மின்வெட்டே இல்லாமல் இடைத்தேர்தல் முடிந்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் மின்வெட்டு தொடர்பாக பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் இருவருக்கும் இடையிலான மின்னொளிப் போட்டியை,  இருளில் நிற்கும் மக்கள் ரசிக்கவில்லை. அவர்கள், மின்சாரம் வந்தால் வீட்டுக்குப் போய்விடுவார்கள். ஏனென்றால், அவர்கள் நிம்மதியாகத் தூங்கி பல நாட்கள் ஆகின்றன!

தமிழகம் மிக மோசம்!
இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 2,25,798 மெகாவாட். ஆனால், பற்றாக்குறையோ பல மடங்கு எனும் நிலையில், மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக்குறையை ஆய்வுசெய்ய மத்திய அரசு அமைத்த 'சுங்குலு’ கமிட்டி அறிக்கை, மின் பற்றாக்குறை அதிகபட்சமாக நிலவும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறது. இந்த ஆறில் மிக மோசமான இடம் தமிழகத்துக்கு என்கிறது சுங்குலு கமிட்டி!
கூடங்குள மின்சாரத்தில் சரிபாதி தமிழகத்துக்கு!
'கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதா? அதில் எத்தனை சதவிகிதம் தமிழகத்துக்கு அளிக்கப்படுகிறது?’ கேள்விகளுக்குப் பதில் கேட்டு கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தருக்கு போன் செய்தால்... 'ஆஹா... ஆஹா... அணுசக்தி... அழகாய் தருது மின்சக்தி...’ என்று காலர் டியூன் ஒலிக்கிறது. அவர் சொன்ன கணக்கு இதோ...
''இந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி முதல் கூடங்குளம் அணுமின் நிலையம், தன் உற்பத்தியைத் தொடங்கி தடை இல்லாமல் மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது. இதுவரை 17.5 கோடி யூனிட் மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்திருக்கிறோம். தொடர்ச்சியாக 400 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின்சார உற்பத்தி மட்டுமே எங்கள் வேலை. வினியோகிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. மத்திய மின்துறை அமைச்சகம் எங்களுக்கு வழங்கிய தகவலின்படி, இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 54.41 சதவிகிதம் தமிழகத்துக்கும், 15.65 சதவிகிதம் கேரளத்துக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்!''
தமிழக மின் உற்பத்தி எவ்வளவு?
தமிழக மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களும் அவற்றின் உற்பத்தித் திறனும்:
அனல்மின் நிலையங்களில் இருந்து - 2970 மெகாவாட்.  
 நீர்மின் நிலையங்களில் இருந்து - 2288 மெகாவாட்.
 மரபுசாரா எரிசக்தியில் இருந்து - 996 மெகாவாட்.
அரசு காற்றாலைகளில் இருந்து - 19 மெகாவாட்.
 தனியார் காற்றாலை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 7,388 மெகாவாட் மின்சாரம்.
 மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைப்பது 3045 மெகாவாட்.
(தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் சுமார் 17,000 மெகாவாட். ஆனால், இவை எப்போதும் சீரான மின் உற்பத்தியைக் கொடுக்காததால் கடும் பற்றாக்குறை.)

-Vikatan Article

ஆ...சாமியோவ் ! - 6 & 7

ஆசாராம் பாபுவின் ஆற்றலையும் அசுரத்தனமான வளர்ச்சியையும் பார்த்த எவரும் இவர் இப்படி ஒரேடியாகச் சறுக்குவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மயக்கும் மேடைப் பேச்சால், தான் ஒரு தெய்வப்பிறவி என்று லட்சக்கணக்கானவர்களை நம்பவைத்தது மட்டுமன்றி, வாஜ்பாய் தொடங்கி அப்துல்கலாம் வரை; பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்நாத் சிங் தொடங்கி பல மாநில முதலமைச்சர்கள் வரை பலராலும் பல வகையிலும் புகழப்பட்டவர் இந்த ஆசாராம் பாபு.
 இப்போது வேண்டுமானால் இவர் சிறைச்சாலையில் இருக்கலாம். ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இவர் இருந்தது சிம்மாசனத்தில். குஜராத்தின் அஹமதாபாத் நகரில் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து இருக்கும் இவரது ஆசிரமம்தான், இவரது சாம்ராஜ்ஜியத்தின் தலைமையகம்.
ஆசாராம் பாபுவை 'சாமியார்’ என்று ஒற்றை வார்த்தையால் வர்ணிப்பது பொருத்தமாக இருக்காது. இவரது பக்தர்கள் இவரை 'பூஜ்ய பாபாஜி’ என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்த இவரது அஹமதாபாத் ஆசிரமத்துக்கு, உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியான மையங்களும் இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் மட்டுமன்றி, தைவான், துபாய், மலேசியா... என்று உலக வரைபடத்தில் இருக்கும் பலதரப்பட்ட நாடுகளுக்கும் சென்று 'சத்சங்கம்’ செய்து இவர் உருவாக்கி வைத்திருக்கும் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்!
பெரிய பெரிய கம்பெனிகளின் முதலாளிகளுக்கும் இயக்குநர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சில சாமியார்களை 'கார்பரேட் சுவாமி’கள் என்று சொல்வதுண்டு. ஒரு விதத்தில் பார்த்தால், ஆசாராம் பாபு இப்படிப்பட்ட சுவாமிகளுக்கும் மேலானவர். காரணம், இவரது ஆன்மிக சாம்ராஜ்ஜியமே கார்பரேட் கம்பெனிகளின் அளவுக்கு பெரியது. தவிர, இந்த சாம்ராஜ்ஜியத்தை ஆசாராம் பாபு நடத்தியதும் கார்பரேட் ஸ்டைலில்தான்.
'பக்தி என்ற ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்துக்கொண்டு ஆன்மிகக் கடை விரித்தால், வியாபாரம் விறுவிறுப்பாக நடக்காது’ என்று கருதிய ஆசாராம் பாபு... யோகா, தியானம், மந்திர ஸ்லோகங்கள், தீக்ஷை, ஆயுர்வேத சிகிச்சை, ஆரோக்கிய உணவு, ஏழைகளுக்கு சேவை என்பது போன்ற பாவ்லா... என்று தனது ஒவ்வொரு ஆசிரமத்தையும் ஒரு ஹைப்பர் மார்க்கெட் மாதிரி விளம்பரம் செய்துவந்தார். விளம்பரத்தைத் தாண்டி மார்க்கெட்டிங்கிலும் ஆசாராம் பாபு மிகப்பெரிய வித்தகர்.
போதாக்குறைக்கு வெண்மேகம் போன்ற இவரது தாடியும் தும்பைப்பூ போன்ற வெள்ளை உடையும் இவரை ஒரு புனிதர் என்று எடுத்த எடுப்பிலேயே நம்பவைத்துவிடும். அன்பும் அக்கறையும் வழிந்தோடும் இவரது பேச்சைக் கேட்டால் ஹிப்னாடிஸம் செய்ததைப்போல மொத்த ஜனமும் மயங்கி, 'ஹரி ஓம், ஹரி ஓம்’ என்று சாமி வந்ததைப்போல ஆடும். பாப் பாடகர்கள் ஆடியன்ஸுக்கு கட்டளையிடுவது மாதிரி மூச்சுவிடாமல் பக்தர்களைத் தன்னோடு தாளம் போட்டுக்கொண்டு பாட இவர் உற்சாகப்படுத்துவார்.
உணர்ச்சிகளால் உசுப்ப முடியாதவர்களைத் தர்க்கரீதியான வாதங்களை வைத்து தன் வழிக்கு கொண்டுவருவதிலும் ஆசாராம் பாபு கில்லாடி. அற்புதமான குரல் வளம் கொண்ட அவர் இறக்கங்களோடு வேதங்களில் இருந்தும், திரிக்கப்பட்ட புராணச் சரித்திரங்களில் இருந்தும் மேற்கோள்களை காட்டி உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவார். பக்தர்களுக்கோ ஞான மழையின் சாரலில் நீராடுவதைப்போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்.
ஒரு சமயம் குஜராத்தின் கோத்ரா நகரில், கல்லூரி ஒன்றில் இவரது சத்சங்கம் ஏற்பாடாகி இருந்தது. பறந்து பறந்து ஆன்மிக 'சேவை’ செய்யும் ஆசாராம் பாபு அன்று ஹெலிகாப்டரில் கோத்ரா வந்து தரையிறங்கியபோது, பைலட்டின் தவறினால் ஹெலிகாப்டர் விளையாட்டு மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்தது. இந்த விபத்தில் இருந்து ஆசாராம் பாபா பிழைத்துவிட்டார். இது போதாதா? 'மரணத்தால்கூட சீண்ட முடியாதவர்’ என்று இவரது ஜால்ராக்கள் இவரை புகழ... அதன் பிறகு எந்த ஊரில் பேசினாலும், 'அன்று கோத்ராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது, என்ன நடந்தது தெரியுமா?’ என்று கேட்டு ஆசாராம் பாபு தன்னைத்தானே அற்புதமாக மார்க்கெட்டிங் செய்துகொண்டார்.
'மார்க்கெட்டிங் திறமை’ என்பது ஆசாராம் பாபுவுக்கு ஆரம்ப காலம் தொட்டே இருந்த ஒன்று. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்துவந்த இவர்களது குடும்பம் பிரிவினைக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்துக்கு குடியேறிய சில வருடங்களுக்குள்ளேயே இவரது அப்பா காலமாகிவிட்டார். அப்போது டீ விற்று பிழைப்பை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்தது. உலகம் தெரிய ஆரம்பித்ததும் அதுவரை அஸ்மல் ஹர்பாலனியாக அறியப்பட்ட இவர், தன் தாயிடம் இருந்து கற்ற யோகாவை மூலதனமாக வைத்து வாழ்க்கையை ஓட்டினார். தாயிடம் இருந்து கற்ற புராணக் கதைகளையும் அவ்வப்போது அவர் எடுத்துவிட... இவரை ஒரு சுவாமிஜியாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதுதான் சரியான ரூட் என்பதை புரிந்துகொண்டு அங்கிருந்து பிருந்தாவன் சென்று ஒரு குருவிடம் மேலும் சில வித்தைகளை கற்றுக்கொண்டு பாபுவாக மீண்டும் அஹமதாபாத் வந்தார்.
பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து குஜராத் அரசிடம் இருந்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே ஓர் ஆசிரமத்தை நிறுவி, அதை வேகமாகப் பிரபலப்படுத்தினார். இவர் ஆசிரமத்தில் இருந்ததால், ஆசிரமம் பாபு என்ற அர்த்தத்தில் ஆசாராம் பாபு என்று பக்தர்கள் இவரை அழைத்தனர்.
'பாவங்களை உதறிவிட்டு ஞானத்தைப் பெற என்னிடம் தீக்ஷை பெற்றுக்கொள்ள வாருங்கள்!’ என்று விடுத்த அழைப்பை ஏற்று, இவர் எங்கே போனாலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். 'தீக்ஷை’ என்பது ஆசாராம் பாபுவின் பிராண்ட் வேல்யூவை உயர்த்த... இவர் இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எட்டு திக்குகளிலும் தனது ஆசிரமத்தின் கிளைகளைத் திறந்தார். செல்வம் குவிய குவிய... செல்வத்தை வேகமாக சேர்க்க இவருக்கு வெறி ஏற்பட்டது. அதனால் அரசு தானமாக கொடுத்த அஹமதாபாத் ஆசிரம நிலத்துக்கு அக்கம் பக்கத்தில் இருந்த ஆறு ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட ஏழை ஜனங்கள் போராட... வேறு வழியில்லாமல் அரசாங்கம் புல்டோசர் கொண்டு இவரது ஆக்கிரமிப்புகளை அகற்றியது. ஆனால் ஆசாராம் பாபு, இதை தன் மீது படிந்த களங்கமாக எடுத்துக்கொள்ளவில்லை. இது நடந்த அடுத்த வருடமே ஆசாராம் பாபுவின் அசிங்கமான முகம் மீண்டும் தன் கோரமான முகத்தைக் காட்டியது.
மத்தியப்பிரதேசத்தில் ஒரு மாபெரும் சத்சங்கம் நடத்தப்போகிறேன் என்று இவர் ஒரு தனியார் கம்பெனியை உதவிகேட்டு அணுகினார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அந்த நிர்வாகத்தினர் தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை சத்சங் செய்துகொள்ள கொடுத்து உதவினர். ஆனால், 11 நாட்கள் சத்சங் நடந்த பிறகு... ஆசாராம் பாபுவுக்கு மீண்டும் மண் ஆசை தலைதூக்கியது. 700 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை காலிசெய்ய மறுத்ததோடு, அந்த இடத்துக்கு சொந்தமும் கொண்டாடிவிட்டார். மண் ஆசையில் இப்படி இவர் பல மோசடிகள் செய்தாலும், இந்த வார்த்தை வித்தகனுக்கு மிகப்பெரிய சறுக்கல் இவர் உதிர்த்த வார்த்தைகளினால்தான் வந்தது.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே அந்த மாணவிக்காக கணணீர் சிந்திக்கொண்டிருந்த நேரத்தில், ''நடந்த தவறில் அந்த மாணவிக்கு சரிபாதி பங்கு இருக்கிறது. தன்னைப் பலாத்காரம் செய்ய முற்பட்டவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, 'அண்ணா... என்னை விட்டுவிடுங்கள்’ என்று அந்த மாணவி மன்றாடியிருந்தால், அந்த மாணவிக்கு இந்த கதி நேர்ந்திருக்காது!’ என்று தன் அடிமனத்தில் படிந்துகிடந்த அழுக்கு எண்ணங்களை ஆசாராம் பாபு வெளிப்படுத்த... கண்டங்களைத் தாண்டியெல்லாம் அவருக்கு கண்டனங்கள் வந்தது.
இந்தக் கருத்தை உதிர்த்த ஒரு சில மாதங்களிலேயே தன்னை தெய்வம்போல நம்பி வாழ்ந்துவந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை, தனது பக்தை என்றும் பாராமல் இவர் சின்னாபின்னமாக்கியபோது,  ''அந்த சிறுமி, 'தெய்வமே என்னை விட்டுவிடு’ என்று உன்னைப் பார்த்து கதறினாளே... ஏன் அவளை நீ விடவில்லை? ஒரு வேளை, 'தாத்தா என்னை விட்டுவிடு’ என்று கதறியிருந்தால் விலகி இருப்பாயோ?'' என்று, இப்போது சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவை நோக்கி நாட்டு மக்கள் கோப கேள்வி எழுப்பினர்! இதையடுத்து ஆசாராம் பாபுவின் காமக் களியாட்டங்கள் ஒவ்வொன் றாக வெளியே வரத் தொடங்கி இருக்கின்றன.

- 7

அபாரமான ஆற்றலும் ஆஸ்தியும் அதிகாரமும் கொண்ட ஒருவனிடம் வக்கிரபுத்தியும் சேர்ந்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கு ஆசாராம் பாபு சரியான எடுத்துக்காட்டு.  தன்னையே கடவுளாக வணங்கிவந்த 16 வயது சிறுமியை, 'பேய் ஓட்டுகிறேன் பேர்வழி’ என்று சின்னாபின்னமாக்கிய சம்பவத்தால் 72 வயதான ஆசாராம் பாபு இப்போது கைதாகி சிறையில் இருந்தாலும் இதைவிட கொடுமையான - மர்மமான - பல குற்றச்சாட்டுகள் இப்போது இவரைப் பற்றி வெளிவரத் தொடங்கியுள்ளன.
 அதில் முக்கியமானது ஜூலை 2008-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலைகள்.
'மேற்கத்திய கலாசாரம் நமது பண்பாட்டை எப்படி எல்லாம் சீரழிக்கிறது... என்று தொடங்கி, இனி பிப்ரவரி 14-ம் தேதியைக் காதலர்கள் தினமாகக் கொண்டாடக்கூடாது. அதை, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லும் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என ஆசாராம் அவிழ்த்துவிட்ட மேடைப் பேச்சுகளால் கவரப்பட்ட பல அப்பாவிகளில் குஜராத்தைச் சேர்ந்த வகேலாவின் குடும்பமும் ஒன்று. இப்படிப்பட்ட அற்புதமான ஆசிரமம் நடத்தும் குருகுலப் பள்ளியில் தங்கிப் படித்தால்தான் பிள்ளைகள் நமது பாரம்பரிய பண்பாட்டோடு வளர்வார்கள் என்ற நம்பிக்கையோடு, அபிஷேக் வகேலா மற்றும் திப்பேஷ் வகேலா ஆகிய தங்கள் பிள்ளைகள் இருவரை ஆசாராமின் பாலகேந்திரா குருகுலப் பள்ளியில் சேர்ந்தனர்.
இதுவரை பிள்ளைகள் தங்களைவிட்டுப் பிரிந்து வெளியே தங்கியது இல்லை என்பதால்... பாச உணர்வோடு அடிக்கடி பிள்ளைகளைப் போய் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் வகேலாவின் மனைவி, ஆசிரமத்தில் போய் பிள்ளைகளைப் பார்த்தபோது அவர்கள் தலை மொட்டையடிக் கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியோடு அவர், வீட்டுக்கு வந்த ஒரு சில மணி நேரத்துக்குள், ''உங்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்துவிட்டார்களா?'' என்று ஆசிரமத்தில் இருந்து ஒரு போன். 'ஐயோ வரவில்லையே... அவர்களுக்கு என்னானது?’ என்று மார்பிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு ஓடினார்கள்.
அங்கே சரியான பதில் ஏதும் கிடைக்காததால்... ஆசிரமத்தைச் சுற்றியிருக்கும் இடங்களில் எல்லாம் பிள்ளைகளைத் தேடி இருக்கிறார்கள். அப்போது இவர்களை சந்தித்த ஆசிரமத்தின் நிர்வாகி பங்கஜ் சக்ஸேனா, 'அரச மரத்தை பதினோரு முறை பயபக்தியோடு சுற்றிவந்து வீழ்ந்து கும்பிட்டுவிட்டு மடிப்பிச்சையாக குழந்தைகளைத் திரும்பவும் கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று பிரசன்னம் சொல்லியிருக்கிறார்.
'எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று இருந்த அந்தக் குடும்பத்தினர் அவர் சொன்ன மாதிரியே பதினோரு முறை அல்ல... அன்று இரவு முழுவதும் ஆசிரமத்தில் இருந்த அரச மரத்தை ஓயாமல் சுற்றிவந்து வேண்டியிருக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை போலீஸில் புகார் செய்யலாம் என்று கிளம்பியவர்களை ஆசிரம நிர்வாகிகள் தடுத்துவிட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வகேலா குடும்பத்தினர் போலீஸ் நிலையம் சென்றபோது, ஆசிரமத்தின் நிர்வாகிகள் இரண்டு பேர் போலீஸ் அதிகாரிகளோடு சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்திருக்கின்றனர். போலீஸார் இவர்களது புகாரை வாங்கவில்லை. மாறாக, ''என்ன... பிள்ளைகளை ஒளித்து வைத்துக்கொண்டு நாடகமாடுகிறீர்களா?'' என்று இவர்களையே மிரட்டியிருக்கிறார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையோடு வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு செய்தி. ''உடனடியாக முச்சந்திக்கு சென்று ஏழு கற்களை பொறுக்கி எடுத்துவந்து காணாமல்போன குழந்தைகளின் உடைகளில் சுற்றி கொதிக்கும் தண்ணீரில் நனைத்து அவர்களின் அறையில் காயவையுங்கள். அவர்களது ஆடைகள் உலர்வதற்கு முன்பு அவர்களைப் பற்றிய நல்ல செய்தி வந்துவிடும்'' என்றது அந்தத் தகவல். ஆடைகள் காய்ந்தன. ஆனால் வகேலாவின் குடும்பத்தினர் விட்ட கண்ணீர் ஓயவில்லை. குழந்தைகளைக் கேட்டு அடுத்த நாள் மீண்டும் அவர்கள் ஆசிரமத்துக்குச் சென்றனர்.
''இங்கே ஆசாராமின் அருள் கிடைத்த பத்து வயதுகூட நிரம்பாத பாலகன் ஒருவர் இருக்கிறார். விரல் நகரத்தைப் பார்த்தே குறி செல்லும் சக்தி அந்த பாலகனுக்கு உண்டு. உங்கள் பிள்ளைகள் இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கேளாள் என்ற கிராமத்தில் இருப்பதாக அந்தப் பாலகன் குறி சொல்கிறார்'' என்ற ஆசிரம நிர்வாகிகள் இவர்களை அலைகழிக்க.. இது உண்மையாக இருந்துவிடாதா என்ற நப்பாசையில் வகேலாவின் குடும்பம் அந்த கிராமத்துக்கு ஓடியது. ஆனால், பிள்ளைகள் அங்கு இல்லை. ஆனால், அதற்குள் ஆசிரமத்துக்கு அருகில் இருக்கும் ஆளரவமற்ற சபர்மதி ஆற்றங்கரையில் இந்தச் சிறுவர்கள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதாகத் தகவல் வர... வகேலா குடும்பத்தினர் வெடித்து அழுதபடி ஆற்றங்கரைக்கு ஓடினர்.
அங்கே அவர்களின் முன்பு இரண்டு உடல்கள் கிடந்தன. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை கணித்த வகேலா, வீட்டில் இருந்து வந்திருந்த பெண்களைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, முதல் போர்வையை அகற்றினார். அங்கே அவரது மகன் திப்பேஷ் மாறு கை மாறு கால் வாங்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். தன் பிள்ளையின் உள்ளுறுப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு வெறும் மார்புக்கூடு மட்டுமே எஞ்சி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடுத்த போர்வையை விலக்கியவர் அகிலேஷின் எரிந்தும் எரியாமல் இருக்கும் பிணத்தைப் பார்த்து துடித்துப் போனார்.
''பாவிகளா... மூன்று நாளா துடிச்சுட்டு இருக்கோமே... உடனே என் பிள்ளைங்களைக் கண்டுபிடிச்சு கொடுத்திருந்தா அவங்களுக்கு இப்படி ஆகியிருக்காதே...’ என்று வகேலா அங்கே வந்த போலீஸாரைப் பார்த்து ஆத்திரத்தில் கத்த... அப்போது அந்த ஆற்றங்கரைக்கு ஆசிரமத்தின் டெம்போ ஒன்று ஆயுதம் தாங்கிய அடியாட் களுடன் வந்தது. வந்ததும் இவர்களை அங்கிருந்து மிரட்டி விரட்டியடித்தது.
பயந்து ஓடிய வகேலாவின் குடும்பத்தினருக்கு அப்போது மீடியாதான் துணை. ஆசாராம் ஆசிரமம் என்பது இரும்புக் கோட்டை மாதிரி. அந்தக் கோட்டையின் கதவுகளை உடைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களும் டி.வி. கேமராக்களும் உள்ளே புகுந்தபோது ஆசாராமின் சிஷ்யர்கள் என்ற போர்வையில் இருந்த குண்டர்கள் அவர்களையும் தாக்கி னார்கள். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மத்தியப்பிரதேசத்தில் ஆசாராம் பாபு நடத்தும் இன்னொரு ஆசிரமத்தில் படித்துவந்த இரண்டு சிறுவர்கள் இதேபோல மர்மமாக இறந்து, அங்கேயும் பிரச்னை வெடித்தது.
அடுத்தடுத்து கிளம்பிய பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஆசாராம், 'பல்லுக்கு பல். கண்ணுக்கு கண்’ என்று மத துவேஷங்களைக் கிளப்பினார். ஆனால், அது அவருக்குக் கைகொடுக்கவில்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் குஜராத் அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.திரிவேதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை நியமித்தது. ஆசிரமத்தில் பில்லி சூனியம் போன்ற மாந்த்ரீக காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகப் பிள்ளைகளைப் பறிகொடுத்த வகேலா குடும்பத்தினர் இந்த கமிஷன் முன்பு கண்ணீரோடு வாக்குமூலம் கொடுத்தனர். அதனால், ஆசாராம் பாபு இதுபோன்ற மாந்த்ரீக காரியங்களுக்காகத்தான் வகேலா வீட்டுப் பிள்ளைகளை நரபலி கொடுத்தாரோ என்ற சந்தேகத்தில் குஜராத்தே கொந்தளித்தது.
ஆனால், ஆசாராம் பாபுவோ விசாரணை கமிஷனையே துச்சமாக நடத்தினார். 'இந்த கமிஷன் அனுப்பும் சம்மனுக்கெல்லாம் கட்டுப்பட்டு நான் ஆஜராக முடியாது!’ என்று சொல்லி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குப் போனார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ''குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் முன்பு விசாரணை கமிஷன் மண்டியிட்டு கைக்கூப்பி விசாரணைக்கு வரும்படி ஒன்றரை வருடங்களாக கெஞ்சுவதா..?’ என்று கோபமாகக் கேட்டது.
இதற்குப் பிறகு ஆசாராம் பாபு விசாரணை கமிஷனுக்கு சாட்சி சொல்ல வந்தார் என்றாலும், அரசியல்வாதிகளைப் போல இவர் ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதும் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே இடையிடையே நீதிபதியிடம் அனுமதிகூட பெறாமல் வெளியே கோஷம்போட்டுக் கொண்டிருக்கும் தன் பக்த கோடிகளை சமாதா னப்படுத்தி அருளுரை நிகழ்த்துவதுமாகவே இருந்தார்.
இந்த இரட்டைக் கொலைகள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தன் அரசியல் பலத்தை வைத்து இந்த வழக்கை ஆசாராம் பாபு இன்றுவரை வெற்றிகரமாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்.
- ஆசாராம் பாபுவைப் பற்றிச் சொல்ல இன்னும் இருக்கிறது!

- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை !

நேருவின் ஷர்வானி கோட்டில் உள்ள ரோஜாவுடன் சேர்த்து சிறு துளி கறையும் இருந்துவிட்டதே எதனால்?
 ''நாம் ஒரு யுகத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். பசப்பு வார்த்தைகள், அரசியல் தந்திரம், மோசடி மற்றும் சராசரி அரசியல்வாதியின் எல்லா வித்தைகளுக்கும் இனி இடமில்லை''- என்று டேராடூன் சிறையில் இருந்த நேரு, காந்திக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள். அதனை அவரது ஆட்சியிலேயே கடைப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை.
''நமது அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றைத் தீர்க்காமல் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அரசியல் சுதந்திரம் என்பது முதலும் முடிவும் அல்ல. நாம் நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு அது ஒரு சாதனம். மனித உறவைப் பற்றிய பிரச்னையின் தீர்வுக்கு ஒரு சாதனம். ஆனால் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை அகற்றாமல் நாம் முன்னேற முடியாது''- சுதந்திரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களிடம் நேரு பேசினார். அந்த இலக்கை அவரது 16 ஆண்டு கால ஆட்சியில்கூட நிறைவேற்றிக் காட்ட முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
''உங்களுடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும்? எஜமானர்கள் மாறி உங்கள் துன்பங்கள் நீடிக்குமானால் அதனால் உங்களுக்கு அதிகமான பயன் இருக்காது. ஒருசில இந்தியர்கள் அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளை வகிப்பதால் அல்லது அதிகமான லாப ஈவுத் தொகைகளை அடைவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. உங்களுடைய பரிதாபகரமான நிலைமை அப்படியேதான் இருக்கும். நீங்கள் இடைவிடாமல் உழைத்துப் பட்டினியில் ஓடாகத் தேய்வீர்கள். உங்களுடைய நெஞ்சில் எரியும் விளக்கு அணைந்துவிடும்''- என்று சுதந்திரத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேரு, பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப் பேச முடியவில்லையே... ஏன்?
பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தியாவில் வகுப்பு வன்முறை வெறியாட்டம் அதிகமாக நடந்தது. அதனைக் கட்டுப்படுத்தி ரத்தச் சகதியை நிறுத்தியாக வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் நேருவுக்கு இருந்தது. தன்னுடைய மனதளவில் இந்துத்துவா கொள்கையும் மத மேலாண்மைச் சிந்தனையும் இல்லாதவராக மட்டுமல்ல, தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் பெருமைப்பட்டுக் கொண்டவர் நேரு. துணிச்சலாய் சில நடவடிக்கைகளை அவர் எடுத்தார். நேருவின் பிம்பம் அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடங்கலற்ற அனுமதியை அளித்தது. இது முதல் சாதனை.
அடுத்த சிக்கல் சமஸ்தானங்கள் வடிவில் வந்தன. பெரிய சமஸ்தானங்கள் தாங்கள் சுதந்திரமான அரசுகளாகச் செயல்பட விரும்பின. 'நாங்கள் சுதந்திரமான அரசுகள்தான்’ என்று சில சமஸ்தானங்களின் அரசர்கள் அறிவித்தார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலை அது. இந்தியாவைச் சுற்றி சின்னச் சின்ன சமஸ்தானங்கள் இருந்தால் இந்தியாவுக்கு தீராத் தலைவலியாக அது அமையும் என்று பிரதமர் நேருவும், அன்றைய உள்துறை அமைச்சரும் நேருவின் சகாவுமான படேலும் நினைத்தார்கள். தன்னுடைய தனித்திறமையால் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார் படேல். சிக்கல் ஏற்படுத்தியவர்கள் மூன்று பேர். திருவிதாங்கூர், போபால், ஹைதராபாத் ஆகியவை அவை. ''நாம் உடனடியாக இதனைச் சரி செய்யாவிட்டால் தியாகங்கள் பெற்று அடைந்த சுதந்திரக் காற்று, சமஸ்தானங்களின் வழியாக வெளியே போய்விடும்'' என்று சமஸ்தானங்கள் இணைப்புத் துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன் எச்சரித்தார். முரண்டுபிடித்த சமஸ்தானங்களை இணைப்பதற்கும் ஆரம்பக் காலக்கட்டத்தைச் செலவுசெய்ய வேண்டியதாயிற்று. படையெடுத்தும் பயமுறுத்தியும் இந்த ஐக்கியத்தை படேல் சாதித்தார். சமஸ்தானத்தையும் தங்களது அதிகாரத்தையும் ஒப்படைத்த அரசர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆயுட்கால மானியம் வழங்கப்பட்டது. அன்றைய மதிப்பில் 4.66 கோடி ரூபாய் மன்னர்களுக்கு மானியமாகத் தரப்பட்டது. இவ்வளவு சலுகை விலையில் வேறு எந்த நாட்டுக்கும் நாடுகள் கிடைத்திருக்காது. இது இரண்டாவது சாதனை.
வலிமையான மத்திய அரசு அமைய வேண்டுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்று நேரு நினைத்தார். இந்திய வரலாற்றை மிக உன்னிப்பாகப் படித்த முதலும் கடைசியுமான பிரதமர் நேரு. பல்வேறு பட்ட மொழி, இனம், மதம் கொண்ட மக்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை உணர்ந்தவர். ஒப்புக்கொண்டவர். அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தவர். இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழன் இரண்டாம் தர குடிமகனாக ஆக்கப்படுவான் என்ற கிளர்ச்சி 1938 முதல் தமிழகத்தில் நடந்துவந்தது. ''இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்'' என்று பிரதமர் நேரு செய்த அறிவிப்புதான் (7.8.1959) இன்று வரைக்கும் நடைமுறையில் இருக்கிறது. ''இதை எப்போது மாற்றலாம் என்று என்னிடம் கேட்டால், அதனை இந்தி பேசாத மாநில மக்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றும் சொல்லும் பரந்த மனப்பான்மை நேருவுக்கு இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற போதும், அது இந்தியாவைச் சிதைத்துவிடும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். 'இல்லை அது இந்தியாவைப் பலப்படுத்தும்’ என்று சொன்னவர் நேரு. இன்று ஏக இந்தியா காப்பாற்றப்பட்டு இருப்பதற்கு இந்த மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இது நேருவின் மூன்றாவது சாதனை.
பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நேரு எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலக நாடுகள் சில அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் ரஷ்யாவின் தலைமையிலும் பிரிந்தன. வல்லரசு நாடுகளின் கூட்டணிக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்தியா இதில் எந்தக் கூட்டணிக்குள்ளும் போய் சிக்கிக்கொள்ளக் கூடாது, எந்த அணியிலும் சேராத அணி சேராக் கொள்கைதான் நம்முடைய அடித்தளம் என்று சொன்னவர் நேரு. தன்னுடைய சோசலிசக் கொள்கை காரணமாக நேரு, பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அவர் எந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்தும் முடிவுகள் எடுப்பதற்கு கடைசி வரைக்கும் தயங்கினார். இது அவரது நான்காவது சாதனை.
ஐந்தாவது சாதனையாக அவரது சோசலிச எண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சோதனையைத்தான் கொடுத்தது. அதுவே இந்தியாவுக்கான வேதனையாகவும் மாறியது.
'கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்’ என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதராக காந்தி வலம் வந்தார். ஆனால் நேரு முன்மொழிந்த வார்த்தைகள் கிராமம், நகரம், படித்தவர், பாமரர், பணம் படைத்தவர், ஏழை ஆகிய அனைத்துத் தரப்பையும் கவனிக்க வைத்தது. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, அறிவியல் மூலமாக சமூகத்தின் வளர்ச்சி என்று நேரு சொன்னார். அவராகச் சொல்லிக்கொண்ட சோசலிசத்தின் அடிப்படைகள் இவை. இதற்கும் மார்க்சியத் தத்துவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அதுதான் வேறு வார்த்தைகளில் வருகிறது என்று வர்த்தகர்கள் பயந்தார்கள். அதுதான் இது என்று சொல்லி பொதுவுடைமைவாதிகள் சிலரும் வழிமொழிய ஆரம்பித்தார்கள். ஏழைகளுக்குச் சாதகமான மாற்றங்களைச் சும்மா செய்ய முடியாது என்று நேருவும் நினைத்தார். அதனால்தான் அதற்கு, 'அறுவைச் சிகிச்சை’ என்று பெயரும் வைத்தார்.
இதனை நாடாளுமன்ற, சட்டசபைகளின் மூலமாகத்தான் செய்ய முடியும் என்று அவர் நினைத்தது முதல் சறுக்கல். பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முதலில் சொன்னார். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் பொதுத் துறை நிறுவனம் ஆகிவிடும் என்று அடுத்துச் சொன்னார். 'தேசிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் பொதுத் துறையும் தனியார் துறையும்  இணைந்து செயல்பட வேண்டும்’ என்று கொஞ்சம் இறங்கினார். 'லாபகரமான தொழில்களில் அரசு இறங்கும்’ என்றார். 'நஷ்டம் அடைந்தால் அந்தத் தொழிலைக் கைவிட்டுவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டார். அதனைச் செயல்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள் என்ற அஸ்திரத்தை எடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டம் என்ற சிந்தனையே சோவியத் இறக்குமதிதான். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக 1923-28 காலக்கட்டத்தில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது. அதுதான் ஐந்தாண்டுத் திட்டம் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இதனைப் பின்பற்றத் தொடங்கின. நேருவும் அதனையே பின்பற்றினார். அவருக்கு அப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டுதலைச் செய்தவர் வி.எம்.விசுவேஸ்வரய்யா. அவர்தான் 'இந்தி யாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தை, அடிமை இந்தியாவில் முதலில் எழுதினார். இது காங்கிரஸ் கட்சியைக் கவர்ந்தது. இதனைப் பற்றி ஆய்வுசெய்ய 'தேசிய திட்ட கமிட்டி’யை நேருவின் தலைமையில் அமைத்தார்கள். அரசியல் கொந்தளிப்பு அதிகம் ஆனதால் இந்த கமிட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் ஆன நேருவுக்கு, தான் முன்பு வகித்த கமிட்டி பதவி ஞாபகத்துக்கு வந்தது. அதை வைத்து ஒரு கமிஷனை அமைத்தார். அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கும் 'திட்ட கமிஷன்’. அதன் தலைவராகவும் நேரு இருந்தார்.
''தேச மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக, வாழ்க்கை நடத்தப் போதிய வசதி பெறுவதற்கு உள்ள உரிமை தேவை. சமூகத்தின் பொருள் வசதிகள் முழுதும் பொதுமக்களின் பொதுநலத்துக்காகப் பயன்படும் விதத்தில் விநியோகிக்கப்படும் முறைகள் இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முறைகள் பொதுநலம் பாதிக்கப்படும் முறையில் இருக்கக் கூடாது. ஒரு சிலரிடம் செல்வமும் பொருள் உற்பத்தி வசதிகளும் குவிந்திருக்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தேவை’- என்று அன்றைய அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மாதிரி நடக்க முடியவில்லையே ஏன்?
டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி ஒரு உதாரணத்தைச் சொல்வார். ''சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற டெய்லர் ஒருவரிடம், தன்னுடைய கிழிந்த, நைய்ந்துபோன கோட் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தான். 'இதே மாதிரி எனக்கு ஒரு கோட் தைத்துக்கொடு’ என்று கேட்டான். இரண்டு வாரத்தில் அவனுக்கு கோட் தைத்துத் தரப்பட்டது. பழைய கோட்டில் எங்கெல்லாம் கிழிந்திருக்குமோ அங்கெல்லாம் கிழித்து, எங்கெல்லாம் நைய்ந்திருந்ததோ அங்கெல்லாம் அதேமாதிரி செய்து, அந்த புகழ்பெற்ற டெய்லர் கோட் தைத்துக் கொடுத்தார்'' என்று சொல்வார் அம்பேத்கர். பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடியவர்களும், அதே மாதிரியான ஒரு ஆட்சியைத்தானே கொடுத்தார்கள்? நேருவால்கூட அது முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

போராட்டக் காலத்தில் கொள்கை பொங்கப் பேசுபவர்கள், பதவியை அடைந்ததும் பெரும்பாலும் பதுங்கிப் படுத்துவிடுகிறார்கள் என்பதற்கு நேருவும் விதிவிலக்கு இல்லை. அதற்குக் காரணம், நேருவை எதிர்க்க காங்கிரஸுக்குள்ளேயே தலைவர்கள் இல்லாமல் போனதுதான்!
 'ஜவஹர்லால் நேருதான் என்னுடைய வாரிசு’ என்று சொன்ன மகாத்மா காந்தி, சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவினார். அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி வந்தபோது நேருவுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பேசப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல், சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் நடைமுறை அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கிவிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். உடம்பு முழுக்க மூளை கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜியும், அதேபோல் அரசியல் செய்ய முடியாத கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர் என்ற பதவிகளில் போய் உட்கார்ந்தார். காந்தியின் சீடரான ஆச்சார்ய கிருபளாளி, கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை உருவாக்கிவிட்டுப் போய்விட்டார். நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜனசங்கம் தொடங்கி அங்கே போய்விட்டார். கொள்கையும் அஞ்சாமையும் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், காங்கிரஸில் இருந்து விலகி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனார். இவரது அறிவு நமக்குத் தேவை என்று எந்த அம்பேத்கரை நேரு தனது அமைச்சரவையில் சேர்த்தாரோ... அந்த அம்பேத்கர், பதவி விலகிவிட்டார்.
தனித்திறமை கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளும் வெவ்வேறு காரணங்களால் காங்கிரஸை விட்டும், தன்னுடைய அமைச்சரவையை விட்டும் வெளியேறியது நேருவுக்கு வசதியாகப் போனது. தன்னைத் தவிர யாருமே இல்லையே என்ற யதார்த்த நிலைமை, தன்னைத் தவிர இனி யார் இருக்கிறார்கள் என்ற கர்வ எண்ணமாக மாறியது. 'காங்கிரஸ்தான் நாடு; நாடுதான் காங்கிரஸ்’ என்று அவர் சொல்லத் தொடங்கினார். இதைத்தான் அவரது மகள் இந்திரா ஆட்சி காலத்தில், 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று மாற்றிச் சொல்லப்பட்டது.
சிலர் விலகிப் போனார்கள் என்றால் சிலரை அடக்கியாக வேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். அதற்குக் காரணம், படேல். 'இன்னொரு படேல் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார். எனவே, லேசாகத் தலைதூக்கிய பிரபலங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு களையெடுக்க நேரு முயற்சித்தார்.
நேர்மையும் சுயசிந்தனையும் கொண்ட தலைவர்களில் ஒருவராக அன்றைய தினம் புருஷோத்தம்தாஸ் டாண்டன் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவதற்குத்தான் பலரும் விரும்பினார்கள். அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் நேருவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும் கறாராகக் கருத்துச் சொல்லக்கூடியவர் டாண்டன் என்பதும் நேருவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். 'டாண்டனுக்கு பதிலாக கிருபளானியை தலைவர் ஆக்கலாம்’ என்றார் நேரு. ஆனால், இதனை படேல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. டாண்டனுக்கு ஆதரவு அதிகமானது. உடனடியாக பிரதமர் பதவியை விட்டும் கட்சிப் பதவியை விட்டும் விலக நேரு திட்டமிட்டார். 'இனி நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பயன்பட மாட்டேன்’ என்றார். அவர் ராஜினாமா அஸ்திரத்தை எடுப்பது அது முதல் தடவை அல்ல.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், 'நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தவர் நேரு. 'ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லி அதனை யாரும் ஏற்காதபோதும், 'ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்றவர் நேரு. அரசியலில், 'ராஜினாமா’ அஸ்திரத்தை அதிகமாகவிட்டு, அதனை வாபஸ் வாங்கியும் சாதனை படைக்கலாம் என்பதைத் தொடங்கிவைத்து அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர் நேரு என்றும் சொல்லலாம்.
அவர்தான் டாண்டன் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகவும் ராஜினாமா அஸ்திரத்தை எடுத்தார். 'என்னை எல்லோரும் துணிக் கடை பொம்மைபோல நடத்த நினைக்கிறார்கள்’ என்றும் சொல்லிக் கொண்டார். அவை எதுவும் எடுபடவில்லை. டாண்டன்தான் தேர்தலில் வென்றார். ஆனால், அவரைத் தனது கட்சித் தலைவராகவே நேரு நடத்தவில்லை. டாண்டனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் நாடாளுமன்றக் கமிட்டியில் இணைத்தார் நேரு. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையெல்லாம் சேர்ப்பதைத் தடுத்தார் டாண்டன். 'நான் உபயோகமாக இருந்த காலம் முடிந்துவிட்டது’ என்று நேரு வருந்தி சொல்லிக்கொண்டார். இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் ராஜாஜியை பஞ்சாயத்து செய்பவராக நேரு வைத்திருந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைமைக்கு ராஜாஜி தள்ளப்பட்டார். ஆனாலும் எந்த முடிவையும் ராஜாஜிக்கு தெரியாமலேயே நேரு எடுத்தார். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு தகவல் தருவதுதான் நேருவின் வழக்கமாக மாறியது.
'இப்படியெல்லாம் செய்து காங்கிரஸைக் குழப்பி அழிப்பதற்கு முன்னதாக என்னை நீங்கள் விடுவித்துவிட வேண்டும். தயவுசெய்து என்னை பைத்தியக்காரனாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று நேருவுக்கு கடிதம் எழுதிவிட்டு டெல்லியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்துவிட்டார் ராஜாஜி. அவரை எப்படியாவது டெல்லியில் உட்காரவைத்து தன்னுடைய காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார். அப்போது ராஜாஜி சொன்னது இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஞாபகம்வைக்க வேண்டியது. ''நான் 'ஞாபகசக்தியை இழந்துவிட்ட வயதான முட்டாள்’ என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஓய்வெடுக்க விரும்பவில்லை'' என்று சொன்னார் ராஜாஜி.
அதாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நேரு எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்!
'அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பது புகழ்பெற்ற அரசியல் பொன்மொழிகளில் ஒன்று. தட்டிக் கேட்பதற்கான சகாக்கள் தனக்கு இல்லை என்பதால்தான் செய்வதும், சொல்வதும்தான் சரியானது என்ற நிலைமை நேருவின் ஆட்சி காலத்திலேயே தொடங்கியது. ஆனால், அதனை எல்லாம் பச்சையாக இல்லாமல் சாமர்த்தியமாக நேரு செய்தார். ஏனென்றால் அவர் சாராசரி அரசியல்வாதி அல்ல!
அடிமை இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மாவை அருகில் இருந்து தரிசித்தவர். தந்தை மோதிலால் நேருவின் தர்க்க நியாயங்களைக் கவனித்தவர். அனைத்துக்கும் மேலாக உலக நாடுகளை நேரில் கண்டவர். பல்வேறு நாடுகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் வீழ்ந்தார்கள் என்பதை எழுத்தெண்ணிப் படித்தவர் நேரு. 'பிரதமர்’ நேருவை, 'தியாகி’ நேரு சிலநேரங்களில் பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருந்தார். அதனால், முதல் வாரம் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் அடுத்த வாரமே, அதற்கு எதிராகவும் பேச வேண்டியதாயிற்று. ''புதிய தொழில்களை அரசாங்கமே ஆரம்பிக்கும். தொழில் முறைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். தனிப்பட்டவர்களிடம் தொழிலைக் கொடுக்காது’ என்று ஒருநாள் நேரு பேசிவிட்டார். அடுத்த நாளே பிர்லா, மோடி, ஷராப் போன்ற தொழிலதிபர்கள் அவரை வந்து சந்தித்தார்கள். 'இப்போதைக்கு எந்தத் தொழிலையும் அரசாங்கம் ஏற்றுச் செயல்படுத்தப் போவதில்லை’ என்று நேரு சொன்னார். இதில் எது ஒரிஜினல் என்ற குழப்பம் அவர் ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளும் இருந்தது. இந்த ஊசலாட்டத்தின் காரணமாகச் சிலரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர நேரு நினைத்தார்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்துப் பேசினார். அவரை காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் என்று நேரு கேட்டுக்கொண்டார். அப்படியானால் நேரு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜே.பி. பட்டியல் கொடுத்தார். அந்தப்பட்டியல் இன்றுவரை பொருத்தமானதுதான்.
''மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதனைப் பகிர்ந்துகொடுத்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். வணிகத் துறையை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்...'' என்று பல்வேறு கோரிக்கைகளை ஜே.பி. அடுக்கினார். ஆறு மாத காலம் பேச்சுவார்த்தையை இழுத்த நேரு இறுதியில், 'இதை எல்லாம் நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை. பிரதமராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கின்ற என்னால் இதையெல்லாம் நிறைவேற்ற இயலாது’ என்றுசொல்லி அமைதியாகிவிட்டார். ''மாஸ்கோவை இந்தியாவுக்கு கொண்டுவந்து காட்டுவேன்'' என்று சொன்ன நேருவே, ''எதனையும் ஒழுங்காக இயக்குவதற்குரிய வழிமுறைகள் வகுக்காமல் நாட்டுடமை ஆக்குதல் ஆபத்தானது'' என்று சொல்லும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். சோஷலிசத்தை திசை திருப்பும் தந்திரம் என்று சோஷலிசத் தலைவர்கள் சொன்னார்கள். அன்று அண்ணா சொன்ன வாசகம்தான், ''காகிதப் பூ மணக்காது, காங்கிரஸின் சோஷலிசம் இனிக்காது!’
அதற்காக நேரு தனது ஆட்சிக்காலத்தின் அனைத்து முறைகேடுகளுக்கும் உடன்பட்டார், அவருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன என்று சொல்ல வரவில்லை. 'எனக்குச் சொத் துடைமை மனப்பான்மை இல்லை. செல்வத்தையும் சொத்துக்களையும் சுமந்துகொண்டு இருப்பது ஒரு பெரிய பாரம் என்பதையும் நான் அறிவேன். தொல்லை என்பதையும் உணர்வேன்’ என்றார். ஆனால், ஊழல் புரிந்தவர்களை அவரால் தடுக்க முடியவில்லை. முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அதற்கு ஓர் உதாரணம்... அவரது செயலாளர் எம்.ஓ.மத்தாய்.


- Vikatan Article

ஆறாம் திணை - 66

26 காசில், உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஒரு நாள் உண்பதற்கான காய்கறிகளை வாங்க முடியுமா?
'முடியவே முடியாது’ என்று சொல்லாதீர்கள். தமிழகத்தில் இயங்கும் 55,000 அங்கன்வாடியின் 15 லட்சம் குழந்தைகளுக்கு, தலா 26 காசைத்தான் காய்கறி வாங்குவதற்கென அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. 'ஸ்நாக் பாக்ஸ்’ எடுத்துக்கொண்டு, ஏ.சி. காரில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அல்ல அவர்கள். கூலி வேலைக்குச் சென்று சனிக்கிழமை சம்பளத்தில் அரிசி வாங்கும் ஏழைகளின் வீட்டில் மலர்ந்த மலர்கள்!
முந்திரி பக்கோடாவும் பாதாம் இனிப்பும் சாப்பிட்டு, ஏலக்காய் டீ குடித்து ஏப்பம் விட்டு என்றோ போட்ட இந்தத் திட்டங்களை, தூசி தட்டி மறுபரீசிலனை செய்யக்கூட அரசாங்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லை!
ஆறு வயது வரை ஏறத்தாழ 15.6 கோடி குழந்தைகள் உள்ள இந்தத் தேசத்தில் ஒரு உசேன் போல்ட்டோ, கஸ்தூரிரங்கனோ, டெண்டுல்கரோ உருவாக ஐந்து வயது வரையிலான அவர்களின் சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, நோய் எதிர்ப்பாற்றல், உளவியல் வலிமை, ஒட்டுமொத்த சுரப்புகள், ஹார்மோன்களின் சீரான செயல்பாடு, புத்திக் கூர்மை, விவாதிக்கும் திறன், ஆளுமைத்தன்மை... என அத்தனைக்கும் 'காய் பூவாவும் கீரை மம்மும்’தான் அடித்தளம்.
இந்த ஒருமித்த வளர்ச்சி இல்லாத குழந்தைகளை 'வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள் உணவியலாளர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும். சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான சூழலில் தேவையான அளவு சரிவிகித சம உணவு கிடைக்காதபோதே, குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான உணவுக் கலாசாரத்தை குழந்தைகளுக்கு நாம் கொண்டுசெல்லாவிட்டால், பின்னாளில் நோய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக் குழந்தைகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. உணவுக்கூறுகளின் குறைபாட்டால், ஒல்லியாக மட்டுமல்ல, சில நேரத்தில் குண்டாகவோ, இளம்வயது சர்க்கரை வியாதியோ, ரத்தக்கொதிப்போகூட வரக்கூடும்.
'என் குழந்தையை சூப்பர் சிங்கர் ஆக்கப்போகிறேன், சானியா மிர்சா ஆக்கப்போகிறேன்’ என நம் இயலாமையையும், தோல்வியையும் ஏமாற்றத்தையும் மூன்று வயதுக் குழந்தைகளிடம் திணிக்கும் முன்னர், நமக்கு எல்லாம் இயல்பாகக் கிடைத்த உணவுப்பழக்கத்தை அவர்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டுப் புகட்ட வேண்டியது, காலத்தின் கட்டாயம்!
இரும்பு, நாகச் சத்து (ZINCசி), சுண்ணாம்பு (CALCIUM) இந்த மூன்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படாமல் இருக்க மிக அவசியமான நுண்கனிமச் சத்துகள். இவற்றுடன் புரதம், சரியான கார்போஹைட்ரேட் மிக அவசியம். சித்த மருத்துவப் பார்வையில் உடலை வளர்க்கப் போதிய அளவிலான இனிப்புச் சுவையும் தேவை. இனிப்பு என்றதுமே, 'சளி பிடிக்குமே, வெள்ளைச் சர்க்கரை வேண்டாம் என்றல்லவா சொன்னீங்க?’ என்று கேட்காதீர்கள். பழங்கள் வாயிலாக வரும் ஃபுருக்டோஸ் இனிப்பும், பனங்கருப்பட்டி வழியாக வரும் இனிப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.
ளி, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உணவு. கேப்பைக்களி, கம்பங்களி, காரக்களி, உளுந்தங்களி, பாசிப்பயறு களி முதலான இனிப்புக் களி வகைகள் நம் பாரம்பரிய உன்னத உணவுகள். அதுவும்போக, களி ஒரு சரிவிகித சம உணவும்கூட. உளுந்தங்களியில் இரும்பு முதலான நுண்கனிமச் சத்துகளுடன் புரதமும் நாரும் அதிகம். பெண் குழந்தைகளின் கருப்பை வலுப்பெறவும், வயதாகும்போது மூட்டுகளின் 'கார்டிலேஜ்’ எனும் தசைநார்கள் வலுப்பெறவும் உளுந்தங்களி உதவும். திருவாதிரையில் சிவன் கோயிலில் தரும் பாசிப்பயறு களியும், வீட்டுப் பெரியவர்களுக்குத் தரப்படும் வெந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உணவுதான்.
ஆனால், உதடுகளில் படாமல் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, டிஷ்யூ பேப்பரால் நாசூக்காக ஒற்றிக்கொள்ளும் நவநாகரிகக் குழந்தைகளை 'களியும் பணியாரமும்’ சாப்பிடச் சொன்னால், முகம் கோணுகிறது. 'ஐயே... அது கையெல்லாம் ஒட்டிக்கும்’ என்கிறார்கள். இதுகூட பரவாயில்லை... 'பிசுபிசுனு கைல ஒட்டினா என் பிள்ளை சாப்பிடாது. ரொம்ப ஹைஜீனிக்’ என்று தூபம் போடும் பெற்றோர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். இத்தனைக்கும் நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்த களி, பிசுபிசுவென ஒட்டாது.
உணவுப் பதார்த்தங்கள் பாத்திரத்தோடு ஒட்டாதிருக்க, பாத்திரங்களில் டெஃப்லான் கோட்டிங் முதல், உணவில் கொழுப்பு அமிலம் வரை பல நச்சுகள் சேர்க்கப்படுகின்றன என்பதைச் சொல்லித்தர, நம் அம்மாக்களில் பலருக்கு நேரம் இல்லை. விளைவு, 'களி’ சிறைச்சாலையில் தரும் தண்டனை உணவாகிவிட்டது. கையில் ஒட்டும் உணவை உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம், பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். 'பேக்கிங் பவுடர் போடாத மஃபின்தான் 'பணியாரம்’. சாக்லெட்டிலும் டூட்டி ஃபுரூட்டியிலும் இல்லாத சத்து, பணியாரத்துடன் வரும் வெங்காயத் துண்டிலும் கொத்தமல்லி கீரையிலும் இருக்கிறது. அது நம்ம உடம்புக்கு ஹெல்த்தி ப்ளஸ் ஹைஜீனிக்’ என அந்தக் குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லித்தர வேண்டும்!
வளர்ச்சி குறைவுற்ற குழந்தைகள் இன்னும் இங்கே மிக அதிகமாக இருப்பதற்கும், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 50 குழந்தைகள் இறந்துபோவதற்கும் உணவைத் தாண்டி இன்னொரு விஷயம் உண்டு. பசியின் கட்டாயத்துக்காக, நகரங்களை நோக்கிப் பெருவாரியாக நகரும் கூட்டம் அதிகரித்துவரும் போக்கு, நம் தேசத்தின் அவலச் சின்னம். சாதீய சமூக அவலங்களாலும், சகமனிதரை நேசிக்காத நம் சுயநலத்தாலும், அப்படி நகர்ந்தவர் வீட்டுக் குழந்தைகளில் பெரும்பாலானவை அம்மாவின் அழுக்கு முந்தானைக்குள் பசியோடுதான் இன்றும் முனகிக்கொண்டிருக்கின்றன். சட்டீஸ்கரில் இருந்தும் பீகாரில் இருந்தும், ஊர், உறவு, மகிழ்வை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கொத்துக்கொத்தாகத் தினமும் சென்னை சென்ட்ரலில் வேலையாளாக வந்து இறங்கும் இளைஞர் கூட்டத்தின் வலியும், 'விளாப்பாக்கத்தில் விவசாய வேலையில், சோளப்பயிர் வைத்திருந்தேன். முதலாளி அதை பிளாட் போட்டு வித்துட்டார். இப்போ நான் செக்யூரிட்டி. என் வீட்டம்மா நாலு வீட்ல பத்துப்பாத்திரம் தேய்க்கிறாங்க’ என்ற சொற்களின் பின்புல வேதனையையும் நாம் என்றுதான் புரிந்துகொள்ளப் போகிறோம்?

- VIkatan Article

Thursday, December 12, 2013

விளை நிலங்களில் எரிவாயுக் குழாய்...

கேரளாவில் இருந்து பெங்களூருக்கு, தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களில்... விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கான குழிகளைத் தோண்டியது, மத்திய அரசின் 'கெயில்' நிறுவனம்!

இந்தத் திட்டம் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்பதாகக் கொதித்த ஏழு மாவட்ட விவசாயிகள், எதிர்க்குரல் கொடுத்து, தீவிர போராட்டங்களில் குதித்தனர். ஆரம்பத்தில், விவசாயிகளுக்கு எதிராக போலீஸை அனுப்பி லத்தியைச் சுழற்றிய தமிழக அரசு, ஒரு கட்டத்தில் திடீர் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக, தன்னை மாற்றிக் கொண்டது. 'விவசாயமும் விவசாயிகளும் தான் முக்கியம். அவர்களை பலிகொடுத்து வளர்ச்சிப் பணிகள் நடப்பதை இந்த அரசு ஒருபோதும் விரும்பாது' என்கிற ரீதியில் வீராவேசக் குரல் கொடுத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றப் படியேறிய இந்த விவகாரத்தில், குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இறுதித் தீர்ப்பில், 'விவசாய நிலங்களில் குழாய் பதிக்கத் தடை இல்லை' என்று நீதிமன்றம் சொல்லிவிடவே... விவசாயிகள் மீண்டும் போர்க் கோலம் பூண்டுள்ளனர். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்துள்ளது.

இதைப் பற்றி பேசிய விவசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.என். கந்தசாமி, ''தமிழக அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டில் எங்களையும் ஒரு மனுதாரராக இணைத்து, இந்த வழக்குக்கு வலுசேர்க்கப் போகிறோம். நீதிமன்றம் மூலம் வழக்கு வேலைகள் ஒருபுறம் இருக்க, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசுடன் சேர்ந்து போராடவும் தயாராகி வருகிறோம்'' என்றார்.

விவசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), ''நீதிமன்ற உத்தரவுப்படி, விவசாயிகளை சென்னைக்கு வரவழைத்து, அவர்களின் கருத்தைக் கேட்டுப் பதிவு செய்தது தமிழக அரசு. மாநிலத்தை ஆளும் ஒரு அரசு, தன் மக்களுக்கு எதிராக நடக்கும் ஒரு விஷயத்தில், உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. 'விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்களை பதிக்க அனுமதிக்க முடியாது' என்றும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் மற்றும் மாநில அரசு இரண்டின் முடிவுகளுக்கு எதிராக, தற்போது உயர் நீதிமன்றத்திலிருந்து வந்திருக்கும் தீர்ப்பு, வேதனையைக் கூட்டுகிறது.

'தடை விதிக்க வேண்டும்' எனக் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது, தமிழக அரசு. இது விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் செயல். நாங்கள் எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்லும் திட்டத்தைக் கண்மூடித்தனமாக எதிர்க்க வில்லை. 'விளைநிலங்களின் வழியே கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய்களைப் பதித்து கொண்டு செல்லுங்கள்’ என்றுதான் கேட்கிறோம். இப்படி சாலை வழியே கொண்டு செல்வதால், யாருக்கும் பாதிப்பு இருக்கப் போவதில்லை. அப்படியிருக்க, அதைச் செய்யாமல், விவசாய நிலங்களின் வழியேதான் கொண்டு செல்வோம் என்று எதற்காக அடம்பிடிக்க வேண்டும். இதை நீதிமன்றமும் கருத்தில் கொள்ளாதது வேதனை தருகிறது. அரபிக்கடல் ஓரமாகவோ அல்லது சாலை வழியாகவோ கொண்டு செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அதையெல்லாம் பரிசீலிக்காமல், குழாய்களை வாங்கிவிட்டோம்... குழி தோண்டிவிட்டோம்... என்பதையே காரணங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கெயில் அதிகாரிகள்'' என்று சொன்னார்.

ஏன் இத்தனை அடம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'கெயில்' நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ''விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால், எதைப் பற்றியும் பேசஇயலாது'' என்று ஒதுங்கிக் கொண்டனர்.

'குழாய்களை வாங்கிவிட்டோம்... குழிகளைத் தோண்டிவிட்டோம்' என்று அடம்பிடிக்கும் அதிகார வர்க்கமே... நீங்கள் தோண்டியிருப்பது விவசாயத்துக்கும் விவசாயிகளுக்குமான குழி என்கிற உண்மையை ஏன் உணர மறுக்கிறீர்கள்!